Advertisment

Vijay TV Serial : முல்லை மீது சந்தேகத்தில் மீனா... சப்போர்ட் வாங்கிய தனம்

Pandian Stores : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டேர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்து என்ன? பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : முல்லை மீது சந்தேகத்தில் மீனா... சப்போர்ட் வாங்கிய தனம்

ஜீவாவும், மூர்த்தியும் கணக்கு பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லை, மாமா, ஹோட்டலும், ஜவுளிக்கடையும் வேணாம்ன்னு சொல்லிட்டீங்க பியூட்டி பார்லர் ஓபன் பண்ணலாம் என சொல்கிறாள். ஆனால் மூர்த்தியோ நமக்கு தெரியாத தொழில்ல இறங்க கூடாது என சொல்லி முல்லை யோசனைக்கு தடை போடுகிறான்.



அதன்பிறகு கார் வாங்கும் விஷயத்தை மீனா, அனைவரிடமும் சொல்கிறாள். இந்த யோசனைக்கு தனமும் நல்லா ஐடியாதான். வீட்டுக்குன்னு வாங்குனா நல்லா இருக்கும், ஆனா இருக்குற பணத்தை எல்லாம் அதுலயே போட முடியாது என சொல்கிறாள். அப்போது மீனா, யோசிச்சு பாருங்க அக்கா, உங்களுக்கு செக்கப் போக, நாளைக்கு குழந்தைக்கு தடுப்பூசி போட போறதுக்கு எல்லாம் கார் இருந்தா நல்லா இருக்கும் என சொல்கிறாள். மூர்த்தியும், மீனா சொல்ற ஐடியா கரெக்டா வரும் என சொல்லி, நம்ம கார் வாங்குறோம் என முடிவு செய்கிறான்.

Advertisment

அப்போ அக்காக்கு வளைகாப்பு முடிச்சிட்டு, அந்த கார்லயே அனுப்பிடுவோம் என முல்லையும் சொல்கிறாள். அதனை தொடர்ந்து பரிட்சைக்கு கிளம்பும் கதிரு வீட்ல என்னை சொல்லிட்டு போறது என  கேட்கும் போது, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என செலகிறாள் முல்லை. பங்களோட உங்காந்து பரீட்சை எழுத யோசிக்கும் கதிருக்கு, அதெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க. யாரையும் பார்க்காம நீங்க எக்ஸாம் எழுதுங்க, நான் வெளியே வெயிட் பண்ணுறேன் என முல்லை சொல்கிறாள்.

அதன்பிறகு வெளியில் இருக்கும் மூர்த்தி, தனத்திடம் எங்க வீட்டுக்கு போயிட்டு வர்றோம். என முல்லை சொல்கிறாள். நெறைய டெலிவரி இருக்கேடா, மதியத்துக்கு மேல போகலாம்ல என மூர்த்தி சொல்ல, இல்லை மாமா காலையிலே வர்றேன்னு சொல்லிட்டோம். போயிட்டு ஒரு இரண்டு மணி நேரத்துல வந்துடுறோம் என சொல்கிறாள் முல்லை. அதன்பிறகு மூர்த்தி சம்மதம் கொடுக்க இருவரும் கிளம்பி செல்கின்றனர்.

ஆனால் இவர்களை பார்த்து சந்தேகப்படும் மீனா, இவுங்க வேற எங்கயோ போற மாதிரி இருக்கு என மீனா சொல்கிறாள். அதற்கு தனம் சும்மா இரு மீனா, முல்லை எது சொன்னாலும் சந்தேகம் படுறது என அவளிடம் கூறுகிறாள். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது, மல்லியும் அவளது பையனும் வீட்டிற்கு வருகின்றனர். கோயிலுக்கு போயிட்டு வந்ததாக அவர்கள் சொல்லும் போது, பிரசாந்த் முல்லை சித்தி வீட்ல இல்லையா என கேட்கிறான். கதிரும் அவளும் உங்க வீட்டுக்கு தான் கிளம்பி வந்தாங்க என தனம் சொல்கிறாள். அப்படியே அவுங்க எதுல வந்தாங்க என மல்லி கேட்க, கதிரோட சின்ன வண்டில தான் கிளம்பி இருப்பாங்க என மூர்த்தி சொல்கிறான். அந்த வண்டி நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்த பழைய மாடல் சித்தி என பிரஷாந்த் கிண்டலாக சொல்ல அத்துடன் முந்தது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment