கார் வாங்குவது குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, நம்ம குடும்பத்துக்கு பெரிய கார் தான் செட் என மீனா சொல்கிறாள். ஆனால் தனமும், முல்லையும் பெரிய காருக்கு நெறைய செலவு ஆகும் என சொல்கின்றனர். அப்போது குறுக்கிடும் மீனா, இவுங்க எப்பாவது தான் நம்ம சொல்ரத கேட்குறாங்க அதுக்கும் தடை போட்டா எப்படி என என கேட்கிறாள். இதற்கிடையே அதெல்லாம் கவலை படாதீங்க நாங்க மூனு பேரும் சேர்ந்து கார் பார்த்துட்டோம் என ஜீவா சொல்கிறான்.
இதை தொடர்ந்து சாப்பாடு செய்ய எந்திருக்கும் முல்லைக்கு இடுப்பு புடுச்சிகிச்சி என சொல்கிறாள். அதற்கு தனம் என்னாச்சினு கேட்க, இன்னைக்கு இதோடு மூணாவது தடவை இப்படி ஆகிருச்சு என சொல்கிறாள். அதற்கு மூர்த்தி ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரியம்மா என கேட்க, நாளைக்கு நாங்க போய் பார்த்துக்கிறோம் மாமா என சொல்கிறாள் முல்லை. அதன்பின்னர் முல்லையை ரூமுக்கு அழைத்து வரும், கதிரிடம், எனக்கு இடுப்பு வலி எல்லாம் இல்லை. நாளைக்கு பரிட்சைக்கு போறதுக்காக பொய் சொன்னேன் என சொல்கிறாள்.
அதற்கு கதிர் நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுற. நான் கடைக்கு போய்ட்டு, ஏதாவது சொல்லிட்டு பரிட்சைக்கு போயிருப்பேன்ல என சொல்ல, அதெல்லாம் இல்லை உங்க கூட நானும் வருவேன் என அவள் சொல்கிறாள். இதற்கடையே நாளைக்கு ஹாஸ்பிட்டல் போறோம்ன்னு சொல்லிட்டு போகலாம். நாளை மறுநாள் எப்படி போறது என கதிர் கேட்கிறான். நீங்க பரிட்சை எழுதும் போது, நான் உங்ககூட இருப்பேன் என முல்லை சொல்கிறாள்.
அடுத்து தன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் தனத்திடம், என்னடி இவ்வளவு நேரம் பேசுன என மூர்த்தி கேட்க, வளைகாப்பு பற்றிதான் பேசிட்டு இருந்தோம் என சொல்கிறாள். அதற்கு மூர்த்தி ஒன்பதாவது மாசம் வளைகாப்பு வைச்சுக்கலாம். நீயும் வீட்டுக்கு போயிட்டு, ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துடுவ என சொல்கிறான். இதற்கிடையே கார் பற்றி பேசும் தனம், நிஜமாவே நம்ம கார் வாங்க போறோமா என கேட்க, கார் வாங்கி கயல் பாப்பா நம்ம குழந்தை, எல்லாரும் கார்ல போகணும்னு ஆசை என மூர்த்தி சொல்கிறான்.
இதனையடுத்து, காலேஜுக்கு கிளம்பி வரும் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு போன் பண்ணி வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, நேத்து நான் போன் பண்ணப்ப்ப எடுக்கல இப்ப எதுக்கு கூப்பிட்டுற, நான் வரலை என சொல்கிறாள். ஆனால் கண்ணன் தொடர்ந்து வற்புறுத்த, நீ போனை வை என சொல்லி கட் பண்ணாமல் விட்டு விடுகிறாள். அந்த நேரத்தில் அங்கு காரில் வரும், ஐஸ்வர்யாவை காரில் அழைத்து கொண்டு செல்கிறான். அப்போது பிரஷாந்தின் குரல் கேட்கும் கண்ணன், இவன் கூட போகத்தான் நம்ம கூட வரலனு சொன்னாலா என் யோசிக்கிறான்.
இதற்கிடையில் பரிட்சை முடித்து விட்டு வெளியே வரும் கதிர், எல்லாரும் பார்த்து சிரிக்குறாங்க ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். அதற்கு முல்லை அவனுங்க கிடக்குறான்ங்க விடுங்க, எல்லாரையும் விட பர்ஸ்ட் மார்க் நீங்கதான் எடுக்க போறீங்க என சொல்கிறாள். நீ ஏன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்க அதான் பயமா இருக்கு என்கிறான் கதிர். அதெல்லாம் நல்லதே நடக்கும் என முல்லை கதிரை கூட்டிக்கொண்டு கிளம்புகிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.