Advertisment

Vijay TV Serial : நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு ஓடிவந்த ஐசு... உருகித் தவிக்கும் கண்ணன்!

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் எனன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு ஓடிவந்த ஐசு... உருகித் தவிக்கும் கண்ணன்!

Pandian Stores Serial Episode Update : பிரஷாந்துடன் மதுரைக்கு போக பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி வரும் ஐஸ்வர்யாவை பார்க்கும் கண்ணன் அவளை எங்கே போற என்று கேட்கிறான்., இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்தா என்னை மதுரைக்கு கூட்டிட்டு போயிருவாங்க. அவுங்க பார்க்குறதுக்குள்ள நான் எங்கயாவது போகணும் என சொல்கிறாள். அப்போது கண்ணன் எனக்காக தான் வந்தியா ஐசு என்று கேட்கிறான்.

Advertisment

அதன்பிறகு என் வீட்ல உள்ளவங்க என்னை மதிக்கல ஆனா எனக்காக நீ வீட்டை விட்டு ஓடி வந்திருக்க என சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யா, அந்த பிரசாந்த் வெறி பிடிச்ச மாதிரி அலையுறான். நான் எங்கயாவது போறேன் என சொல்கிறாள். ஆனால் அவளை தடுக்கும் கண்ணன் நாம இங்க இருக்க வேண்டாம் என்று அவளை கூட்டிக்கொண்டு செல்கிறான்.

இதற்கிடையே மூர்த்தி வீட்டில் கண்ணன் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவன் அந்த பதினைந்தாயிரம் பணத்தை என்ன பண்ணான் என மீனா கேட்கிறாள். அதே கேள்வி தனம் முல்லையை பார்த்து உனக்கு தெரியும் நீ சொல்லு என்று சொல்கிறாள். அப்போது முல்லை ஐஸ்வர்யாவுக்கு கண்ணன் பீஸ் கட்டியதை பற்றி சொல்கிறாள். இதனை கேட்டு தனம், மீனா இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.



அப்போது தனம் அம்மா வழக்கம் போல சண்டை போட தனம் அங்கிருந்து எழுந்து செல்கிறாள். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் ஜெகா ஐஸ்வர்யாவை எங்கே என கேட்கிறான். அப்போது அவள் ரூமில்தான் இருக்கிறாள் என்று சொல்லும் கஸ்தூரி அங்கு சென்று பார்க்க அவள் ரூமில் இல்லை. வீடு முழுவதும் தேடியும் அவள் இல்லாததால் அதிர்ச்சியடைகின்றனர்.

இதனிடையில் ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு செல்லும் கண்ணன், அவன் நண்பர்களை வர வைத்து அவர்களிடம் நடந்தவற்றை சொல்கிறான். இதை கேட்ட அவன் நண்பர்கள், கல்யாணம் பண்ணிகோங்க என ஐடியா சொல்கின்றனர். ஐஸ்வர்யாவுக்காக கண்ணனும் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறான் அதன்பிறகு நண்பர்களுடன் கோவிலுக்கு செல்கின்றனர் கண்ணும், ஐஸ்வர்யாவும்.



கோவிலில் தெரிந்தவர்கள் இருப்பதால் காரைக்குடிக்கு போய் கல்யாணம் பண்ண ஈசியா இருக்கும் தோணுது என கண்ணன் நண்பர்கள் சொல்கின்றனர். அதன்பின்னர் கண்ணன் ஐடி ப்ரூப் எடுக்க அருகிலிருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு செல்கிறான். அப்போது அவனை பார்க்கும் ஜீவா கண்ணனை கூப்பிட அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment