Advertisment

Vijay TV Serial : கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு குடும்பத்தினர் அட்வைஸ் : அடுத்து என்ன நடக்கும்?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு குடும்பத்தினர் அட்வைஸ் : அடுத்து என்ன நடக்கும்?

Tamil Serial Pandian Stores Episode Update : கண்ணன் பிரச்சனை குறித்து வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜீவா அவன் எந்த தப்பான எண்ணத்தோடும் பேசி இருக்க மாட்டான் என சொல்ல, கதிரும் அவன் சொன்னா புரிஞ்சுப்பான் என சொல்கிறான். அதன்பிறகு அவனை கூப்பிட்டு அவ்வளவு அவசரமா பொய் சொல்லிட்டு ஏன்டா போன என கேட்கிறான் ஜீவா. அடுத்து மூர்த்தியும், நம்ம வீட்ல எவ்வளவு சந்தோஷமான விஷயம் எல்லாம் நடந்தது. இப்போ எல்லாரும் உன்னால முகத்தை தூக்கி வைச்சு உட்கார்ந்து இருக்காங்க என சொல்கிறான்.

Advertisment

நம்ம வீட்ல வசதியா வளர்ந்தது நீ மட்டும் தான்டா. நீ படிக்குறதுக்கு எது கேட்டாலும் நாங்க பண்ணி கொடுக்குறோம்ல. அப்போ நல்லா படிக்கலாம்லடா கண்ணா. என அட்வைஸ் பண்ண, ஜீவாவும், அந்த பொன்னு ஐஸ்வர்யா பாவம்டா. அந்த பையனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கட்டும்டா என சொல்கிறான். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் கண்ணன், இதுக்குமேல இந்த விஷயம் பற்றி வீட்ல பேச முடியாது. என்ன பண்றது என யோசிக்கிறான்

அதன்பின்னர் வீட்டில் அனைவரும் வளைகாப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கண்னையும் அழைத்து பேசுகினறனர். இதேபோல் ஜெகா வீட்டிலும் வளைகாப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது,

ஐஸ்வர்யா நான் நாளைக்கு வளைகாப்புக்கு என்ன டிரெஸ் போட என கேட்கிறாள். ஆனால்கஸ்தூரி நீ ஒன்னும் அங்க எல்லாம் வர வேண்டாம் என சொல்கிறாள். அதற்கு ஜெகா நம்ம தனம் வளைகாப்பு தானே இதுல என்ன கஸ்தூரி என் கேட்கிறான்.

அதற்கு கஸ்தூரி, அங்க பிரசாந்த் தம்பியும் வரும். நீயும் வந்த கண்ணனை பார்த்து பல்ல இளிச்சுட்டு இருப்ப என சொல்ல, அதற்கு ஐஸ்வர்யாவும் பிரசாந்த் வந்தா நானும் அங்க வரலை என சொல்கிறாள். அதன்பின்னர் கஸ்தூரி உள்ளே சென்றுவிட, ஜெகா, கண்ணன் விளையாட்டு பையன் மா அவன் செட்டில் ஆக எல்லாம் இன்னும் நாலு வருஷம் ஆகும் உனக்கு அமைஞ்சு இருக்குறது நல்ல வாழ்க்கை என சொல்கிறான். கண்ணன் செட்டில் ஆகுர வரைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று ஐஸ்வர்யா சொல்கிறாள்.

அதற்கு ஜெகா நீ அப்படி சொன்னாலும் அத்தன வருஷம் உன் சித்திகூட நீ எப்படி இருப்ப? என்க்கும் எங்க அம்மாவுக்கும் நீ இங்க இருக்கிறது பிச்சனை இல்ல ஆனா உன் சித்தி உன்ன சும்மா விடமாட்ட யோச்சி முடிவு பண்ணு என சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதற்கிடையில் ஜனார்த்தன் பக்கத்து கடைக்காரன் வண்டி நிறுத்துவதில் பிரச்சனை செய்கிறான். அப்போது அவனிடம் வந்து என் கடை கஸ்டமர் வண்டியை நிப்பாட்டுனா உனக்கு என்ன வலிக்குது.

கடையை காலி பண்ணாம இன்னும் என்ன பண்ற. வாடகை கொடுக்கவும் துப்பு இல்லை கடைய காலியும் பண்ணமாட்ர என என சத்தம் போடுகிறான். அப்போது எதிர்த்து பேசும்பக்கத்து கடைகாரன், ஜனார்தனனை அடித்து கீழே தள்ளி விடுகிறான். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment