Tamil Serial Pandian Stores Episode : தனத்திற்கு வளைகாப்பு நடத்த மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது, ஜீவா, கதிர், கண்ணன் மூவரும் அனைத்து ஏற்பாட்டுகளும் கவனித்து வருகின்றனர். அப்போது மூர்த்தி குடும்பத்துடன் காரில் வந்து இறங்க அனைவரும் சேர்த்து மண்டபத்திற்கு வருகின்றனர். அதன்பிறகு கதிரும் ஜீவாவும் மூர்த்தி கூட்டிக்கொண்ட மாப்பிள்ளை அறைக்கு செல்ல முல்லை மீனா இருவரும் தனத்தை கூட்டிக்கொண்டு பெண் அறைக்கு சென்கினறனர்.
பெண் அறையின் தனத்திற்கு மேக்கப் நடக்கிறது. மூர்த்தியை அறைக்கு கூட்டி வந்த ஜீவா அவனுக்கு மேக்கப் போட தயாரகிறான். ஆனால் மூர்த்தி வேண்டாம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி போடுகிறான். இதற்கிடையே தனத்திற்கு மேக்கப் போடும்போது இதெல்லாம் வேண்டாம் என்று தனம் சொல்ல முல்லையும் மீனாவும் மிரட்டுகிற மாதிரி பேசுகின்றனர். அதற்கு தனம் என்ன ரெண்டுபேரும் மிரட்டுரீங்க என்று கேட்க, முல்லை வெளியில் வரவேற்க செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறாள்.
இதனையடுத்து வெளியில் கதிருடன் வரவேற்க இருக்கும் முல்லை கதிர் முகத்தில் பன்னீர் தெளிக்கிறாள். இதை பார்த்த கண்ணன் வந்தவங்கள வரவேற்க சொன்னா இங்க ரெண்டுபேரும் விளையாடிட்டு இருக்கீங்களா என்று கேட்கிறான். அதற்கு கதிர் உன்ன சாப்பாடு ரெடியானுதான பார்க்க சொன்ன என சொல்ல அப்போது அங்கு வரும் ஒரு பெண், என்ன முல்லை அடுத்து உனக்கு வளைக்காப்பா என்று கேட்கிறார். அதற்கு இருவரும் புன்னைகையுடன் அமைதியாக இருக்க, அவரை உள்ளே அழைத்துசெல்லுமாறு கண்ணனிடம் முல்லை கூறுகிறாள்.
அவர் போன பிறகு முல்லை கதிரிடம் அவங்க கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லால என கேட்க நீ சரி சொல்லு உனக்கு வலைகாப்பு பண்ணிடலாம் என்று சொல்கிறான். இதற்கிடையே அறையில் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் மூர்த்திக்கு போன் வருகிறது. அதை எடுத்து பேசியதும் மூர்த்தி சோகமாகிறான். அதற்கு ஜீவா ஏன் என்னாச்சின என்று கேட்க, உங்க அண்ணி நகை வச்சித்தான் கடைக்கு இடம் வாங்குனது வீட்டை சரி பண்ணது. கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு ஒரு நகைகூட வாங்கி கொடுக்கல அதான் இப்போ வாங்கி கொடுக்கலாம்னு ஆர்டர் கொடுத்தேன். அதுலா 12 ஆயிரம் கம்மியா இருக்குனு நகைய கொடுக்கமாட்டேன்னு சொல்ராங்கனு சொல்கிறான் இதை கேட்டு ஜீவா யோசிக்கிறான்.
இதனையடுத்து வரவேற்பு இடத்திற்கு ஜீவா வர அந்த நேரத்தில் ஜனார்த்தன் அவரது மனைவியுடன் வருகிறார். வந்ததும் ஜீவாவிடம் ஏன் மாப்ள மீனாவுக்கு இந்த மாதிரி வளைகாப்பு செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனா அண்ணிக்கு பண்றீங்க நல்லாருக்கு என்று சொல்ல, அதற்கு ஜீவாஅப்போ நிலைமை சரியில்லை என்று சொல்ல, ஜனார்த்தன் மனைவி அப்போதான் ஊரெல்லாம் வைரஸா இருந்துச்சு என்று சொல்கிறாள். அதற்கு ஜனார்த்தன் நா இப்போ சந்தோஷமாத்தான் சொன்னேன் என்று சொல்கிறான்.
ஜீவா அவர்களை உள்ளே அழைத்துச்செல்ல ஜனார்த்தன் மனைவி தனத்தை பார்க்க அறைக்கு செல்கிறாள். இதற்கிடையே முல்லையின் அப்பா அம்மா அங்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கும் முல்லை உள்ளே அழைத்துச்சென்று மூர்த்தி அம்மாவிடம் பேச வைத்துவிட்டு வருகிறாள். இதற்கிடையே மூர்த்தி நடிகை குறித்து சொன்னதை ஜீவா கதிரிடம் சொல்ல இருவரும் என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர். இதனையடுத்து மல்லியும் பிரஷாந்தும் வருகின்றனர். அவர்களை வரவேற்க, பிரஷாந்த் மூர்த்தி அறைக்கு மல்லி தனம் அறைக்கும் செல்கிறனர். மூர்த்தியை பார்த்த பிரஷாந்த் என்ன சித்தப்பா ஆளே மாறிட்டீங்க என சொல்ல தம்பிங்க பண்ண வேலை மூர்த்தி சொல்கிறான்.
இதற்கிடையே தனம் அறைக்கு வரும் மல்லி தனத்திடம் பட்டுபுடவை பற்றி கேட்கிறாள். அதற்கு தனம் இதுவே 23 ஆயிரம் என்று சொல்ல ஒரு 50 ஆயிரத்திற்கு எடுத்திருக்கலாமே என்று மல்லி சொல்கிறாள். இதை கேட்டு கடுப்பாகும் மீனா அம்மா குழந்தையை கொடு ஒரே வேர்க்குது என்று சொல்லிவிட்டு வெளியில் செல்கிறாள். இதற்கிடையே ஜெகா பட்டாசு வெடி கொண்டாட்டத்துடன் மண்டபம் நோக்கி வந்துகொண்டிருக்கிறான். இந்த வெடி சத்தத்தை கேட்டு தனம் சந்தோஷப்பட அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.