Pandian Stores Episode Update : கண்ணன் ஐஸ்வர்யா இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தவிட்டதாக முருகன் முல்லையிடம் சொல்கிறான். இதை கேட்டு முல்லை சந்தோஷப்படுகிறார். ஆனால் நான் சொல்லி தான் நீங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு தெரிய வேணாம். மாமா யாரையும் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என முல்லை முருகனிடம் சொல்கிறாள். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா இருவருக்கும் சாப்பாடு கொடுக்குமாறு சொல்கிறாள்.
அதன்பின்னர் முருகன் இருவரையும் அழைத்து சாப்பாடு பரிமாறுகிறான் அப்போது கண்ணன் கண்ணீருடன் சாப்பிடுவதை பார்த்த பார்வதி, நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடலை போல. நேரத்துக்கு சாப்பாடு. காலேஜ் பீஸ். வண்டி எல்லாம் கொடுத்து இருக்க முடிய்லைல என சொல்கிறாள். மேலும் ஐஸ்வர்யா பாட்டியை வைத்தும் பேசுகிறாள்.
இதனிடையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் த்தன் வீட்டில் இருப்பதாக முல்லை தனத்தினம் கூறுகிறாள். இதை கேட்டு தனம் நிம்மதியடைய, அவன் என் கண் முன்னாடி எல்லாம் வர வேணாம். எங்காயது நல்லபடியா இருக்கட்டும் என மனதிற்குள்ளே நினைத்து கொள்கிறாள். அதனை தொடர்ந்து மூர்த்தி நம்ம கடைல வியாபாரம் நல்லபடியா போக ஆரம்பிச்சுருச்சு. நிற்கவே நேரம் இல்லை என சொல்கிறான். அதனை கேட்டு அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.
அதனை தொடர்ந்து அனைவரும் சகஜமாக பேசிவிட்டு சாப்பிடுவதற்காக செல்லும்போது, 'டேய் கண்ணா' என தனமு கூப்பிடுகிறாள். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன்பின்னர் முல்லை கதிரிடம் கண்ணனை தங்கள் வீட்டில் தங்க வைத்தது குறித்து சொல்கிறாள். அதற்கு அவன் நல்லவேளை செஞ்ச முல்லை. அவனை மன்னிக்கவும் முடியலை. அப்படியே விடவும் முடியலை என சொல்கிறான்.
அதன்பின்னர் கதிர் அறையை விட்டு வெளியே வரும் போது ஜீவாவும் தூக்கம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறான். அப்போது கதிர் அவன் முருகன் மாமா வீட்டில் இருப்பது குறித்து சொல்லவும் ஜீவா நிம்மதியடைகிறான். அப்போது லஷ்மி தூக்கத்தில் கண்ணன் பெயரை சொல்லி புலம்புவதை பார்த்து அவள் அருகில் செல்கின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil