Advertisment

Tamil Serial : பிரஷாந்திடம் உண்மையை சொல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா : அடுத்து என்ன நடக்கும்?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial : பிரஷாந்திடம் உண்மையை சொல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா : அடுத்து என்ன நடக்கும்?

Pandian Stores Serial Episode : நிச்சயம் முடிந்து ஊர் திரும்பிய ஐஸ்வர்யாவிற்கு போன் செய்யும் பிரசாந்த் ஊருக்கு போய்ட்டு என்ன கால் பண்ணவே இல்லை என கேட்கிறான். அதற்கு இவனிடமே உன்னை எனக்கு பிடிக்கலை. கண்ணன் மாமாவாதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லிடுவோமா என யோசிக்கும் ஐஸ்வர்யா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கஸ்தூரி யார்ட்ட பேசிட்டு இருக்க என்று கேட்க, பிரசாந்த் என்று சொன்னதும் சந்தோஷத்தில் நல்லா பேசு என்று சொல்லிட்டு செல்கிறாள். ஆனால் அதற்குள் பிரஷாந்த் அப்புறம் கால் பண்றேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறாள்.



இதறிகிடையெ மூர்த்தி வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது கதிர் ஜீவா இருவரும், குட்டி யானை வாங்குறது பற்றி சொல்லலையா என மூர்த்தியிடம் கேட்க, இப்போ வேண்டாம்டா, அப்புறம் சொல்லிக்கலாம் என்கிறான் மூர்த்தி. அந்த நேரத்தில் குழந்தை கயல் முதன்முதலாக தவழ்வதை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதன்பின்னர், அனைவரும் தூங்க சென்றவுடன், தனம் மூர்த்தியிடம், அண்ணன் தம்பி மூனு பேரும் பேசிட்டு இருந்தீங்களே என்ன விஷயம் என கேட்கிறாள்.

Advertisment

அப்போது மூர்த்தி குட்டி யானை வாங்கப்போவது குறித்து சொல்கிறான். அதற்கு தனமும், ரொம்ப நல்ல விஷயம். அப்படியே பண்ணுங்க மாமா என கூறுகிறாள். இதற்கிடையே, அறையில் ஜீவாவிடம் கார் வாங்குவது பற்றி கேட்கிறாள் மீனா. இதை கேட்டு ஜீவா அதை கேட்டு குட்டி யானை வாங்குறத இவள்கிட்ட சொல்லக்கூடாது என யோசித்து எதையோ சொல்லி சமாளிக்கிறான். அடுத்து  மீனா, அவள் வீட்டிற்கு போன் பண்ணி கயல் தவழ்ந்த விஷயம் பற்றி சொல்கிறான். அதை கேட்டு சந்தோசம் அடைகின்றனர்.

இந்த மகிழ்ச்சியில், ஜனார்த்தன் முதல் வேலையா, நாளைக்கே காலுக்கு நடை வண்டி செஞ்சு கொடுக்கணும் என சொல்ல அவன் மனைவி, அவன் கயல் இங்க பெரிய வீட்ல விளையாட வேண்டியவ அங்க சின்ன வீட்ல என்ன பண்றாளோ. மீனா அடுத்த பிள்ளை பெத்துக்குறதுக்குள்ள, மகளையும் மருமகனையும் இங்க கொண்டு வந்துடனும் என சொல்கிறான்.

இதற்கிடையே  மூர்த்தி வாங்க போகும் குட்டி யானை அவன் குடோனுக்கு வர மூவரும் வண்டியை பார்க்கின்றனர் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment