Advertisment

Vijay TV Serial : அண்ணனுக்கு தெரியாமல் கண்ணனுக்கு உதவி : கண்டுபிடிப்பாரா மூர்த்தி?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பிதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : அண்ணனுக்கு தெரியாமல் கண்ணனுக்கு உதவி : கண்டுபிடிப்பாரா மூர்த்தி?

Pandian Stores Serial Today Episode Update : கடையில் மூர்த்தி மயக்கமானத்தை பார்த்து பதற்றப்படும் கதிர் உடனடியாக ஜீவாவுக்கு சொல்கிறான். அதனைத் தொடர்ந்து ஜீவா டாக்டருடன் கடைக்கு வருகிறான். அதன்பிறகு மூர்த்தியை செக் பண்ணும் டாக்டர் பிபி கொஞ்சம் அதிகமா இருக்கு. எதுக்கும் கவலைப்படாம இருங்க என சொல்ல, எனக்கு ஏதாவது ஆச்சுன்னு அம்மாவையும் அண்ணியையும் நல்லா பார்த்துக்கோடா என மூர்த்தி கதிரிடம் சொல்கிறான். அதை கேட்டு பதட்டமடையும் கதிர், அப்படியெல்லாம் சொல்லதனே உனக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்கிறான்

Advertisment

இதற்கிடையில் கண்ணன் ப்ரண்டு சதீஷை சந்திக்கும் ஜீவா, கண்ணன் ஐஸ்வர்யா குறித்து விசாரித்து விட்டு கொஞ்சம் பணம் கொடுத்து அவனுக்கு சாப்பாடு இல்லை டிரெஸ் வேணும்னா வாங்கி கொடு என்று சொல்கிறான் மேலும். நான் கொடுத்தேன்னு தெரிய என சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அதன்பிறகு ஜீவாவும், கதிரும் சாப்பிட வருகின்றனர்.

அப்போது மீனா இல்லாதததை பார்த்து ஜீவா, எங்க என விசாரிக்கிறான். அப்போது வீட்டிற்குள் வரும் மீனா, அப்பாவை பார்க்க சென்றதாக கூறுகிறாள். அதற்கு ஜீவா திடீர்ன்னு அப்பாவை பார்க்க போயிட்டு வந்து இருக்க என என கேட்க, கண்ணனை தங்க வைக்க ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பாவும் சரின்னு சொல்லிட்டரு என சொல்ல அனைவரும் நிம்மதியடைகின்றனர்.

இதனிடையில் கண்ணனை பார்க்க வரும் சதீஷ், அவர்களிடம் குன்னக்குடில தங்க யாருமே வீடு தர மறுப்பதாக சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யாவும் நாம சென்னை போய்டலாம், அங்க எழில் அண்ணா கிட்ட கெல்ப் கேப்போம் என சொல்கிறாள். அதற்கு கண்ணன் எப்படி எல்லாரையும் விட்டுட்டு  வருவது. சொந்த ஊரை விட்டு போறது எல்லாம் சரியா வராது என சொல்கிறான்.

அப்போது அந்த வழியாக வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்டமர் ஒருவர், இவர்களின் பிரச்சனையை கேள்விப்பட்டு, தங்க இடம் கொடுப்பதாக கூறுகிறார். அதனை தொடர்ந்து இருவரும் அவருடன் கிளம்பி செல்கின்றனர். இதனிடையில் சரியான நேரத்தில் உதவி செய்ததிற்காக வீட்டில் உள்ள அனைவரும் மீனாவுக்கு நன்றி சொல்கிறனர்.



அப்போது அவள் எல்லாரும் அவனை நினைச்சு கவலைப்படுறீங்க. அதுக்கு பேசாமா அவனை இங்கயே கூட்டிட்டு வரலாம்ல என சொல்கிறாள். அதற்கு ஜீவா, அவனுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு மீனா. கஷ்டப்பட்டு வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சுக்கட்டும் என சொல்கிறான். இதனிடையில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் சின்ன கூரை வீட்டிற்கு வருகின்றனர். வீட்டை இருவரும் சுற்றிப்பார்க்கும் போது இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment