Advertisment

Vijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா?

Pandian Stores Serial Episode Update : மூர்த்தி வீட்டில் தனம் சொன்னதை கேட்டு அமைதியாக வீட்டுக்கு வரும் கண்ணன் வீட்டில் வந்து நானே எங்க அம்மாவ கொன்னுட்டேன் என்று சொல்லி கதறி அழுகிறான். அவனுக்கு ஐஸ்வர்யா ஆறுதல் சொல்கிறாள். ஆனாலும் நான் எங்க வீட்ட நம்பியிருக்கனும் அவசரப்பட்டு கல்யாணத்த பண்ணி என் குடும்பத்தையே இழந்துட்டேன். இப்போ எங்க அம்மா என் குடும்பத்துக்கே இல்லாம போய்ட்டாங்க என்று சொல்லி கதறி அழுகிறான். அவனுக்கு ஐஸ்வர்யா ஆறுதல் சொல்லி தோல் மீது தாங்கிக்கொள்கிறாள்.

Advertisment

இதற்கிடையே மூர்த்தி வீட்டில் அனைவரும் தூங்காமல் இருக்க முல்லை அம்மாவும், ஜெகாவும் அனைவரையும் சமாதாப்படுத்தி தூங்க சொல்கின்றனர். அப்போது தனம் தூங்காமல் இருப்பதை பார்க்கும் மூர்த்த அவளுக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறான். அதன்பிறகு விடிந்தவுடன் ஆற்றில் மொட்டை அடித்துக்கொள்ளும் கண்ணன் அம்மாவை அடக்கம் செய்த இடத்தில் பால் ஊற்றிக்கொண்டிருக்கிறான்.

அப்போது மூர்த்தி ஜீவா கதிர் ஜனார்த்தன், முருகன், ஜெகா அனைவரும் வருகின்றனர். அப்போது கண்ணன் செய்வதை பார்த்து அதிர்ச்சியில் அனைவரும் நிற்க ஜனார்த்தன் அவனிடம் கேட்க போகிறான். ஆனால் மூர்த்தி அவனை தடுத்து விடுகிறான். அதன்பிறகு பால் ஊற்றி முடித்துவிட்டு எழுந்து கும்பிடும் கண்ணன், தப்புதான் அம்மா நா வேணும்னு பண்ணலமா அந்த புள்ளைக்கு புடிக்காத கல்யாணம் நடக்க கூடாதுனுதான் ஏதோ செய்ய போய் இப்படி பண்ணிட்டேன் அம்மா என்று கதறி அழுகிறான்.

அவன் அழுவதை பார்த்து மூர்த்தியும் தம்பிகளும் அழுகின்றனர். அப்போது முருகன் டேய் கண்ணா என்று கூப்பிட அவன் அனைவரையும் திரும்பி பார்க்கிறான். அவர்கள் வரும்போது அவன் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துகொள்கிறான்.  அதன்பிறகு ல்ஷ்மி அம்மாவின் இறுதி சடங்கு நடந்த இடத்தில் பாலை கூற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதன்பிறகு அங்கிருக்கும் ஒருவர் மூர்த்தியிடம் அஸ்தியை கொடுக்கிறார். அதை வாங்கிகொண்டு அனைவரும் கிளம்பும்போது ஜனார்த்தன் நீ ஏண்டா நிக்கிர போ என்று கண்ணனிடம் சொல்கிறான்.

அதன்பிறகு அனைவரும் நடந்து சொல்லும்போது மூர்த்தி மட்டும் கண்ணனை கவலையுடன் திரும்பி பார்க்கிறான். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Tamil Serial Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment