Advertisment

காதல் கவிதை நல்லாதான் இருக்கு...! ஆனா அடுத்து என்ன சோதனை நடக்குமோ?

Tamil Serial Update : இவர்கள் இருவரும் இப்படி நெருக்கமாக இருந்தாலே அடுத்து ஏதோ ஒரு பிரச்சனை அரங்கேறும் என்பதற்காக அறிகுறி

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
காதல் கவிதை நல்லாதான் இருக்கு...! ஆனா அடுத்து என்ன சோதனை நடக்குமோ?

Tamil Serial Rating Update : நீங்களும் ஒவ்வொரு வாரமும் கடைசியில இப்படித்தான் எதாவது சொல்லிட்டு போறீங்க... ஆனால் நாங்க நினைக்கிற மாதிரி சீரியல்ல எதுவுமே நடக்கலையே என்ற பேசப்படும் அளவுக்கு ப்ரமோ வெளியிடுவதில் ரோஜா சீரியலை அடித்துக்கொள்ள வேறு யாரும் இ்ல்லை.

Advertisment

தமிழ் சின்னத்திரையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலில் முக்கியமானது ரோஜா சீரியல். 1000 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியல் எபிசோடுகள் விறுவிறுப்பை ஏற்படுத்தினாலும், தொடக்கத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு விமர்சனங்களை சந்திக்கவும் தயங்கவில்லை. பொய் சொல்லி தனது வீட்டிங்குள் புகுந்த ஒரு பெண்ணை விரட்ட அந்த குடும்பத்தினர் மேற்கொள்ளும் முயற்சியே இந்த சீரியலின் கதைக்கரு

ஆயிரம் எபிசோடுகளை கடந்தாலும் இதன் கதை ஒரு வரியில் முடித்து விடும் அளவுக்குதான் உள்ளது. தற்போது பொய் சொல்லி வீட்டுக்கு வந்த பெண் அனு அந்த வீட்டு பெண் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்தாலும் கடந்த சில தினங்களாக அவளை வீட்டிற்குள் அனுமதித்தனர். அதற்கு முக்கிய காரணம் நீலாம்பரி என்ற புது வில்லிதான். அனு மற்றும் ரோஜாவை தீர்த்துக்கட்ட நீலாம்பரி திட்டம் தீட்டுகிறார. இதில் அவளது முழு கவனமும் அனு மீது இருப்பதால் ஒரிஜினல் அனுவான ரோஜாவை காப்பாற்ற டூபிளிக்கெட் அனுவை வீட்டிற்கு அனுமதிக்கிறார்கள்.

ஆனால் இப்போது அனு ரோஜாவை அடிக்க போக அண்ணப்பூரணி கோபத்தில் அனுவை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார். இதனால் வெளியில் வந்து தனது வக்கீலுக்கு போன் செய்யும் அனு தன்னை வீ்டை விட்டு வெளியேற்றி விட்டதாக சொல்லஅவரும் அடைக்கலம் கொடுக்காமல் கைவிட்டு விடுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் நடந்து செல்லும் அனு கார் மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இனிமேல் கதையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், அர்ஜூன் ஏதோ மாஸ்டர் ப்ளான் செய்துவிட்டதுபோல் காண்பிக்கப்படுகிறது. இதனால் அடுத்து எதோ ஒரு திருப்பம் ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எதிர்பார்க்கவைத்து ஏமாற்றுவதுதான் ரோஜாவின் உண்மை நிலை. கவிதை நடையில் வெளியாகியுள்ள இந்த ப்ரமோ காதலர் தினத்தின் முன்னோட்டமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் இப்படி நெருக்கமாக இருந்தாலே அடுத்து ஏதோ ஒரு பிரச்சனை அரங்கேறும் என்பதற்காக அறிகுறி. இதனால் அடுத்து அனு சாக்ஷி இருவரும் எதோ சூழ்ச்சி செய்யப்போகிறார்கள் என்பதை குறிப்பால் உணர்த்தகிறதா இந்த ப்ரமோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எது எப்படியோ இவ்வளவு நாள் அடுத்து என்ன நடக்கும் என்று ஓரளவு கணிக்கும்படி கதை இருந்தது. ஆனால் தற்போது யூகிக்க முடியாத அளவுக்கு செல்கிறது என்று சொல்லாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamil Serial Update Tamil Serial Roja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment