Advertisment

இதுதான் ரோஜாவின் தீ பார்வையோ..! அதிரடி திருப்பம் அரங்கேறுமா?

Tamil Serial Update : அண்ணப்பூரணியின் பேத்தி பெயரில் இருப்பவர் அனு. அதனால் உண்மையான பேத்தி ரோஜாவை காப்பாற்ற அனுவை பலிகடா ஆக்க அர்ஜூன் முடிவு செய்துவிட்டார்.

author-image
D. Elayaraja
New Update
இதுதான் ரோஜாவின் தீ பார்வையோ..! அதிரடி திருப்பம் அரங்கேறுமா?

Tamil Serial Roja Rating Update : நல்லவேலையாக ரோஜாவுக்கு நெற்றிக்கண் இல்லை... இருந்திருந்தால் எதிரில் இருப்பவர் பஸ்பமாகியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு ரோஜா தனது தீப்பார்வையை காட்டியுள்ளார். ஆனால் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை கதையை தவிர மற்ற எல்லாம் கரைக்டா பண்ணுவீங்க என்று சொல்லும் அளவுக்குதான் உள்ளது.

Advertisment

சன்டிவியின் பிரபலமான சீரியல் ரோஜா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேடை்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. சிப்பு சூரியன் பிரியங்கா நல்காரிஷ. வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் அர்ஜூன் ரோஜா ரொமான்ஸ் காட்சிகளுக்கே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. என்னதான் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், பலமுறை கடுமையான விமர்சனங்களை சந்திப்பதில் ரோஜாவுக்கு நிகர் ரோஜாதான்.

தான் இந்த வீட்டு பேத்தி என்று சொல்லி உள்ளே நுழைந்த அனுவை அவர் இந்த வீட்டு பேத்தி இல்லை என்று நிருப்பிக்க எடுக்கும் முயற்சிகளே கதை. தற்போது வரை 1000 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் கதையை 2 வரிகளில் அடக்கிவிடும் அளவுக்குதான் உள்ளது. அர்ஜூன் ரோஷா இருவரும் அனுவை இந்த வீட்டை விட்டு விரட்ட பலமுறை முயற்சி செய்தாலும் இறுதியிவல் அவர்களுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. இந்த முயற்சியின் முடிவில் அர்ஜூன் ரோஜா இருவரில் ஒருவர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆவார்.

தொடர்ச்சியான வில்லன் கோஷ்டியே வெற்றி பெறும் இந்த சீரியலுக்கு எப்படி இவ்வளவு ரசிகர்கள் என்று கேட்கலாம். அதற்கு முக்கிய காரணம் ரொமான்ஸ் கட்சிகளும், எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போன்ற காட்சி அமைப்புகளும் தான். ஆனால் இவர்கள் நிரூப்பிக்கும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அனுவின் நடவடிக்கைகளை பார்த்தே குடும்பத்தினர் அனைவரும் அவள் இந்த வீட்டு பொண்ணு இல்லை என்று கண்டுபிடித்துவிட்டனர்.

அதன்பிறகு என்ன அனுவை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. இப்போது ரோஜா அனு இருவரையும் கொல்ல புதுசா ஒரு வில்லி வந்துள்ளார். ஆனால் அவரின் கோபம் அனைத்தும் அண்ணப்பூரணியின் பேத்தி மேல் தான் இருக்கிறது. ஆனால் இப்போது அண்ணப்பூரணியின் பேத்தி பெயரில் இருப்பவர் அனு. அதனால் உண்மையான பேத்தி ரோஜாவை காப்பாற்ற அனுவை பலிகடா ஆக்க அர்ஜூன் முடிவு செய்துவிட்டார். இதனால் அனுவை தங்களது வீட்டுக்குள்ளே வைக்கவேண்டிய சூழல்.

ஆனால் இதை தெரிந்துகொண்ட அனு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது புதிது புதிதாக கேரக்டர்கள் என்டரி ஆகி வருகின்றனர். கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு ஒரு கர்ப்பிணி பெண் அவரது கணவரை கொன்றுவிட்டதாக கூறி பதியப்பட்ட வழக்கில் அர்ஜூன் வெற்றி பெற்றார். அப்போது ஒரு பெரிய வக்கீலின் பகை கிடைத்தது. இப்போது அதே பெண் குழந்தையுடன் கூட்டி வந்துள்ளனர். இதை பார்த்த யசோதா பொங்கி பேசும்போது அவளை ரோஜா பார்வையிலே சுட்டெரிக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது புது கேரக்டர் என்டரியால் சீரியலுடனான ஒரு நெருக்கம் இல்லாமல் போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும். தவறாக வீட்டிற்குள் நுழைந்த பெண்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதை விட்டுவிட்டு கதையை ஏன் சுற்றி வளைக்கிறார்கள் என்பது இயக்குநருக்கே தெரிந்த உண்மை.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Suntv Serial Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment