Advertisment

மாமியார் மருமகளுக்கு சிறந்த உதாரணம் இவர்கள்தான் : என்ன ஒரு பாச மழை

Tamil Serial Update : செழியன் இந்த குடும்பத்தை பற்றி கவலைப்படுவதே இல்லை. குடும்பத்தின் செலவுகளை அவன் எப்போதோ ஏற்றிருக்க வேண்டும்

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாமியார் மருமகளுக்கு சிறந்த உதாரணம் இவர்கள்தான் : என்ன ஒரு பாச மழை

Tamil Serial Rating Baakiyalakshmi Update : அடடா என்ன ஒரு பாசம்... மாமியார் மருமகள் என்றால இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவி சீரியலி்ல் பாசமழை தாண்டவமாடுகிறது. மகன் குடும்பத்தின் மீது அக்கறையாக இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்த மருமகள் மாமியாருக்கு உதவுகிறார் என்பது ஆறதலான விஷயம் தான். அதுதான் பாக்யலட்சுமி சீரியல்.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிரும் குறிப்பாக இல்லத்தரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதையும், அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும்தான் ஒரு இல்லாத்தரசியின் வாழக்கை போராட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளது இந்த சீரியல்.

இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த சீரியல் சற்று விமர்சனங்களையும் சந்திக்கதான் செய்கிறது. அதிலும் இதில் கோபி கேரக்டர் செய்யும் அட்டூழியங்கள எல்லையில்லாமல் செல்கிறது. அழகான மனைவி அன்பான குழந்தைகள், என ஒரு நல்ல குடும்பம் இருந்தாலும் தனது முன்னாள் காதலியை மணமுடிக்க தயராகும் கோபி ஒருபக்கம். இந்த உணமை தெரிந்தும் சொல்ல முடியாத நிலையில் உள்ள கோபியின் அப்பா ஒரு பக்கம்.

மாமனாருக்கு மருந்து வாங்க பணம் போதாததால், ரப்பகலாக வேலை செய்யும் பாக்யா ஒரு பக்கம் என இந்த சீரியல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்ட கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், குடும்பத்தில் இருக்கும் பணத்தேவைகளை பாக்யா எப்படி சரிக்கட்ட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் வீட்டிற்கு மூத்த மகனான செழியன் வீட்டை பற்றி எந்த கேரும் எடுத்தக்கொள்ளாது இப்படியும் ஒரு மகன் இருப்பான என்று பேச வைத்தாலும், மருமகள் ஜெனியின் நடத்தை இப்படியும் ஒரு மருமகளாக என்று ஆச்சிரியத்தை தருகிறது. தான் சம்பாதித்த பணத்தை தானே வைத்துக்கொள்ள நினைக்கும் மூத்த மகனுக்கு மத்தியில், தான் சம்பாதித்த அனைத்தையும் அம்மாவிடம் கொடுக்கும் இளையமகன் எழில் பாராட்டை பெருகிறார்

இந்நிலையில். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், மாமியார் பாக்யாவிடம், மருமகள் ஜெனி தனது கணவர் செழியன் குறித்து பேசுகிறார். செழியன் இந்த குடும்பத்தை பற்றி கவலைப்படுவதே இல்லை. குடும்பத்தின் செலவுகளை அவன் எப்போதோ ஏற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. ஆனால் நான் வேலைக்கு சென்ற பிறகு நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருப்பபேன் என்று சொல்கிறார்.  

இதை கேட்டு நெகிழும், பாக்யா நீ இப்போவே எனக்கு உதவியாத இருக்க ஜெனி நீ இருக்கிறதாலதான நான் எல்லா வேலையும் செய்துகொண்டு இருக்கிறேன் என் மகளை விட அதிகமாக என்கூட இருக்க என்று சொல்கிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒவ்வொரு வீட்டிலேயும் மாமியார் மருமகள் இப்படி இருந்துவிட்டால் நாடே சொர்க்கம் தான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment