Advertisment

சொல்றதுக்கு வேற எதுமே இல்லையா? ட்ரெண்டிங்கை மாத்துங்க கோபி சார்...!

Tamil serial Update : இல்லத்தரசிகள் மத்தியில் பாக்யா நல்ல பெயரை பெற்றிருந்தாலும், விவாகரத்து வாங்க கோர்ட்டுக்குத்தான் வந்திருக்கிறோம் என்பது கூடவா தெரியாது

author-image
D. Elayaraja
New Update
சொல்றதுக்கு வேற எதுமே இல்லையா? ட்ரெண்டிங்கை மாத்துங்க கோபி சார்...!

Tamil Serial Baakiyalakshmi Update In tamil : கோபி இன்னும் சொன்னதையே திரும்ப திரும்ப திரும்ப சொல்றீங்களே நீங்க சொல்றது எல்லாமே பொய்னு தெரிஞ்சா ராதிகா என்ன ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியுமா உங்களுக்கு ஆப்பு கண்பார்ம்தான் என்று சொல்லும் வகையில் பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியலகளில் ஒன்று பாக்யலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் தற்போ கோபி பாக்யாவை விவாகரத்து செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த வாரம் முழுவதும் இது தொடர்பாக எபிசோடுகளே ஒளிபரப்பானது.

இந்நிலையில் தற்போது ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கும் கோபி, ஏற்கனவே தனது குடும்பத்தை பற்றி சொன்ன பழைய கதையை சொல்லி ராதிகாவை மைன்ட்வாஷ் செய்கிறார். இவர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறாரே ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் இவரை குடும்பத்துடன் பார்த்தோமே என்று ஒரு சிறிய சந்தேகம் கூடவா வரவில்லை ராதிகாவுக்கு?

அவர் மேல் அவ்வளவு காதல் என்றால், தன்மீது கொஞ்சமும் சந்தேகப்படாத ராதிகா இப்படி ஏமாற்றுகிறோமே என்று கோபியும் யோசிக்கவில்லை இருவருமே சுயநலத்துடன் இருக்கிறார்கள். இது சமூகத்தில் சில குடும்பங்களில் நடப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் இதில் ஒன்று மட்டும் புரியவே இல்லை. பாக்யாவுக்கே தெரியாமல் விவாகரத்து வாங்க நினைக்கும் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு எங்கே இருப்பார்?

தனது கணவர் விவாகரத்து செய்துவிட்டார் என்று தெரிந்தால், பாக்யாவின் நிலைமை எப்படி இருக்கும் கோபி தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவுடன் எப்படி வாழ முடியும் என பல கேள்விகள் எழுகிறது. ஆனால் இதற்கெல்லாம் பதில் டைக்டர்தான் சொல்ல வேண்டும். கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் மக்கள் மத்தியில் கோபியாகவே பதிந்துவிட்டார். இவர் கேரக்டரை மாற்றிவிட வேண்டாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே சமயம் இல்லத்தரசிகள் மத்தியில் பாக்யா நல்ல பெயரை பெற்றிருந்தாலும், விவாகரத்து வாங்க கோர்ட்டுக்குத்தான் வந்திருக்கிறோம் என்பது கூடவா தெரியாது என்ன இப்படி இருக்காங்க என்று சற்று சளிப்பைதான் ஏற்படுத்துகிறது. ஆனால் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற அவரது நோக்கமே அவரது கேரக்டரின் பாராட்டுக்கு முக்கிய காரணம்.

ஆனாலும் மனைவியை விட்டுவிட்டு அடுத்த பெண்களை பார்க்கும் ஆண் மகன்களுக்கு கிடைக்கும் திட்டு மற்றும் விமர்சனங்கள் இந்த சீரியலுக்கு அளவுக்கு அதிகமாக வந்துகொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment