Tamil Serial Pandian Stores Update : தமிழில் குடும்ப ஒற்றுமைக்கு பெயர் பெற்ற சீரியல் என்றால் அபர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று அடித்து சொல்லி விடலாம். அந்த அளவிற்கு குடும்ப உறவுகளின் ஒற்றுமையை தெளிவாக காட்சியமைத்துள்ள இந்த சீரியல் விஜய்டிவியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்பத்தில் பிறந்த 4 சகோதரர்கள் ஒற்றுமையுடன் ஒரு மளிகைகடை நடத்தி வருவவே இந்த சீரியலின் மெயின் கதைக்கரு.
தொடக்கத்தில் மளிகைகடையை ஒரு அங்கமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியல் தற்போது ட்ராக் மாறி குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பாண்டியன் ஸ்டோர்சின் கடைசி பையன் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டத்தல் இருந்து குடும்பத்தில் பிரச்சினை தான் பிரதான கதையம்சமாக உள்ளது. இதனால் இந்த சீரியலில் தொடக்கத்தில் இருந்த சுவாரஸ்யம் படிப்படியாக குறைந்து வருகிறது என்று ரசிகர்கள் பெரும்பாலும் கூறி வருகினறனர்.
திருமணம் செய்துகொண்ட கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தற்போது அவனை விட்டில் சேர்த்து்ளளனர். ஆனால் அவர்கள் வெளியில் இருந்த வரை எப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது கண்ணன் – ஐஸ்வர்யா வீட்டில் சேர்ந்துவிட்டதால் அடுத்து என்ன பிரச்சனை நடக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா.
கண்ணன் வெளியில் இருந்தபோது ஜனார்த்தன் கடை பணம் திருட்டு பிரச்சனையில் கடைசியில் வேலை செய்த பையனை கதிர் அடிக்க அவன் ஆட்களை அழைத்து வந்து கணணனை அடித்தது பெரிய பிரச்சனையாக வெடித்தனது. அப்போது கூட ஐஸ்வர்யா கதிர் மாமாவை அடிக்காம கணணனை அடித்துவிட்டார்கள் என்று சொல்லி இருந்தார். வெளியில் இருக்கும:போதே இவர் இப்படி பேசுகிறார் வீட்டிற்குள் வந்தால் என்னவாகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
தற்போது வீட்டிற்குள் வந்துவிட்ட ஐஸ்வர்ய தனது இன்னிங்சை தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் யாரும் நைட்டி போடக்கூடாது என்று உள்ளபோது, ஐஸ்வர்ய தற்போது நைட்டியுடன் சுற்றி வருகிறார். இதை பார்த்த மீனா நைட்டி போடக்கூடாது என்று சொல்ல ஐஸ்வர்யா மீனாவின் பேச்சை துளி கூட மதிக்கவில்லை. ஏற்கனவே பணத்திருட்டு விஷயத்தில் மீனாவின் அப்பா மீது கம்ப்லைண்ட் கொடுக்கலாம் என்று சொன்ன ஐஸ்வர்யாவை பார்த்து திகைத்து போனார் மீனா.
தற்போது நைட்டி போடுவது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையுடன் இருக்கும் குடும்பத்தில் யாராவது குடும்பத்தை பிரிக்க வரவேண்டுமே அதுதானே சினிமா மற்றும் சீரியலின் எழுதப்பாத விதி. இந்த விதியை உண்மையாக்குவது போல் ஐஸ்வர்யாவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஐஸ்வர்யா நடந்துகொள்ளும் விதம் ரசிகர்கர்களுக் கோபத்தைதான் ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சனையில் குடும்பத்தில் உள்ளர்வர்கள் ஐஸ்வர்யா மீது கோபப்பட்டால் கண்ணன் யார் பக்கம் நிற்பார் என்பது பெரிய கேள்விக்குறி. இப்போதூன் நைட்டியில் பிரச்சனை தொடங்கியுள்ளது. கூடிய விரைவில், பெரிய பிரச்சனை வெடிக்கும் அப்போது பார்த்துக்கொளளலாம் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வார எபிசோடு நைட்டி பிரச்சனை மற்றும் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சியில் முடிந்துவிடும்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் கண்ணன் ஐஸ்வர்யா ரொமான்ஸ் செய்ய அப்போது அங்கு மூர்த்தி என்ட்ரி ஆகி விடுகிறார். இதனால் அவர்கள் பதற்றமையும் நிலையில், மூர்த்தி இந்த விஷயத்தை தனத்திடம் சொல்ல தனம் அவர்களை நம்ப ரூமில் தங்க வைக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். இதனால் அடுத்து சில எபிசோடுகள் இவர்களுக்குள் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.