Advertisment

வசமாக சிக்கிய அர்ச்சனா... போலீசிடம் கெஞ்சும் செந்தில்... இதெல்லாம் தேவையா?

Tamil Serial Rating : என்னதான் அர்ச்சனா தப்புக்கு மேல் தப்பு செய்தாலும் அவளை அனைவரும் மன்னிக்கத்தான்செய்வார்கள் .

author-image
D. Elayaraja
New Update
வசமாக சிக்கிய அர்ச்சனா... போலீசிடம் கெஞ்சும் செந்தில்... இதெல்லாம் தேவையா?

Tamil Serial Raja Rani 2 Rating Update : வீட்டுக்கு தெரியாமல் பொய் சொல்லிவிட்டு ஏதாவது ஒரு ஏமாற்று வேலை செய்தால் அது கடைசியில் இப்படிததான் போய் முடிவும் என்பதை உரக்க சொல்லும் காட்சிதான் இப்போது ராஜா ரானி சீரியலில் இடம்பெற்றுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான ராஜா ராணி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இதில் வரும் பல காட்சிகள் ரசிகர்களள் மத்தியில் சலசலப்பையும், கடுமையான விமர்சனங்களையும் சந்திக்காமல் இருந்தததில்லை. அந்த அளவிற்கு துரோகத்தின் உச்சம் இந்த சீரியல் என்று சொல்லாம். தனது மூத்த மகன் சரவணன் மற்றும் இளையமகன் செந்தில் ஆகிய இருவருக்கும் அம்மா சிவகாமி திருமணம் செய்து வைக்கிறார்.

இதில் செந்திலுக்கு வந்த மனைவி அர்ச்சனா மாமியார் வீட்டை பழிவாங்குவதற்கு வந்தது போலவே வில்லத்தனத்தை அல்லி தெளிக்கிறார். ஆனால் முத்தவன் சரவணனின் மனைவி சந்தியா குடும்பத்தை பாதுகாக்க வந்தவள் போல் அனைத்து ஆபத்தில் இருந்தும் பாதுகாக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு முன்பு அவளது குடும்பம் செய்த ஒரு தவறை மனதில் வைத்து சிவகாமி சந்தியாவை நம்புவதில்லை.

இது ஒருபுறம் இருக்க சந்தியா செல்லும் இடமெல்லாம் அவருக்கும் சிவகாமி குடும்பத்திற்கும் ஆப்பு வைக்கும் அர்ச்சனா அந்த பழியை தூக்கி அப்படியே சந்தியா மீது போடுகிறார். இதை நம்பும் சிவகாமி சந்தியாவை திட்டி தீர்த்துவிடுவார். இப்படியே சென்றுகொண்டிருக்க ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும் சந்தியா ஆபத்தில் சிக்கி சரவணனுடன் வீடடுக்கு திரும்பி வர சந்தியாவின் மனதை புரிந்துகொள்கிறார் சிவகாமி.

ஆனால் அர்ச்சனா தனது வில்லத்தனத்தை நிறுத்துவதாக இல்லை. சந்தியாவும் சரவணனும் வெளியூர் சென்ற கேப்பில், சரவணனின் கடையில் புகுந்து தனது கடையில் புடவை எடுக்கும் நபர்களுக்கு இங்கு 2 கிலோ சுவீட் இலவசம் என்பது உட்பட பல தில்லு முல்லு வேலைகளை பார்க்கிறார். மேலும் சரவணன் குக்கிங் காம்படிஷன் போகும்போது அங்கு ஒருவருடன் சேர்ந்து கொண்டு சரவணனின் சமையலை கெடுக்க பார்க்கிறார்.

இதையெல்லாம் தற்போது ஒவ்வொன்றாக தெரிந்துகொள்ளும் சந்தியா சிவகாமி மீது ஆன்லைன் புகார் கொடுத்தது அர்ச்சனா தங்கை தான் என்று தெரிந்துகொள்கிறார். இதற்கிடையே மாமியார் வீட்டில் தனது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு குற்றாலத்தில் லாஜ்சில் கணவர் செந்திலுடன் இருக்கும் அர்ச்சானாவை போலீஸ் கைது செய்து விடுகின்றனர். இவர்கள் தங்கள் தம்பதி என்று சொன்னாலும் போலீசார் நம்புவதாக இல்லை.

இதனிடையே தெரிந்த உண்மைகைளை வீட்டில் சொல்லலாமா அல்லது சரவணனிடம் மட்டும் சொல்லாமா என்று சந்தியா யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது ராஜா ராணி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. என்னதான் அர்ச்சனா தப்புக்கு மேல் தப்பு செய்தாலும் அவளை அனைவரும் மன்னிக்கத்தான் செய்வார்கள் ஏனென்றால் அவர் தான் வில்லி அவர் வீட்டில் இருந்தால் தான் கதை நகரும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

பலமுறை அர்ச்சனா மாட்டியுள்ளார். ஆனால் அத்தனை முறையும் அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தாலும் மீண்டும் தவறுதான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் செய்த பல தவறுகள் அவரது மாமியார் சிவகாமிக்கு இன்னும் தெரியவில்லை. இதை எல்லாம் தெரியும்போது சிவகாமி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ண வேண்டும் என்பதை டைரக்டர் இன்னும் எழுதவில்லை போல... அவர் எழுதியவுடன் அர்ச்சனா சிவகாமியிடம் மாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment