Advertisment

Tamil Serial Rating : காது குத்து விழாவில் குழப்பம் : தனம் முடிவு தவறா? பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ

Tamil Serial Update : எப்போவுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை மட்டம் தட்டி பேசும் ஜனார்த்தன் தற்போது தனத்தின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : காது குத்து விழாவில் குழப்பம் : தனம் முடிவு தவறா? பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ

Tamil Serial Pandian Stores Rating Update : ஒரு குடும்பம், 4 சகோதரர்கள், ஒரு மளிகை கடை இவர்களி் வாழ்வில் நடக்கும் சூவாரஸ்யமான சம்பவங்களே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதைக்கரு. விஜய்டிவியில் அதிக ரசிகர்கள கொண்ட சீரியல்களில் முன்னணியில் உளள பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து முதல்நிலையில் உள்ளது.

Advertisment

கடந்த சில எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக சென்றுகொண்டிருகிறது என்று சொல்லாம். வீட்டை மீறி திருமணம் செய்துகொண்ட கண்ணன் வீட்டிற்குள் இணைந்தது. தனம் குழந்தைக்கு மீனா பால் கொடுத்தது, கண்ணன் மனைவி ஐஸ்வர்யா நைட்டியுடன் வீட்டில் சுற்றுவது, தனம் மற்றும் மீனா பேச்சை அவர் தட்டி கழிப்பது, முல்லை குழந்தை ஏக்கம் எபிசோடுகள் பரபரப்பின் உச்சமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா வீட்டில் உள்ளவர்களின் பேச்சை மீறி பேசும் விதம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கலகத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. தற்போது அனைவரும் வீட்டில் ஒன்றாக இருந்தாலும் கூட மனதளவில் அவர்கள் தனித்தனியாகவே இருக்கின்றனர். இதனால் சீரியல் முன்பு போல சுவாரஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மீனாவின் மகள் கயலுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மீனாவுக்கு சகோதரர்கள் இல்லை என்பதால், தனம் தனது அண்ணனை தாய்மாமன் முறை செய்யும்படி சொல்கிறாள்இ அதை ஏற்று ஜெகவும் சரி என்று சொல்லி விடுகிறார். ஆனால் தற்போது கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.  

தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஜென மீனா குழந்தைக்கு சீர் செய்யும்போது மீனாவின் அப்பா ஜனார்த்தன் தடுத்து விடுகிறார். அப்போது மீனாவின் அம்மா சிங்கப்பூரில் இருந்து ஜனார்த்தனின் அண்ணன் மகன்வந்துள்ளதாகவும் அவர் மடியில் அமரவைத்து கயலுக்கு காதுகுத்த உள்ளதாகவும் சொல்லிவிடுகினறனர். இதனால் ஜெகா அப்படியே இருந்துவிட தனம் சோகமகிறாள். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.

எப்போவுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை மட்டம் தட்டி பேசும் ஜனார்த்தன் தற்போது தனத்தின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் மீனாவும் தனது உறவினர் வருவது குறித:து சந்தோஷமாக இருக்கிறார்.

இதன் மூலம் பாண்யடின் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீண்டும்ஒரு குழப்பம் வெடிக்க உள்ளதாகவே தெரிகிறது. ஏற்கனவே மீனா குழந்தைக்கு நாங்கள் எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்ட கஸ்தூரி இந்த பிரச்சனையை சும்மா விடுவாரா என்று ரசிகர்கள் பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறனர். அதில் ஒரு ரசிகர், ஜனார்த்தன் சொன்னது சரிதான் ஜெகா தனத்தின் மகனுக்குதான் தாய் மாமா கயலுக்கு எப்படி தாய் மாமா ஆக முடியும் என்று கேட்டுள்ளர்.

இந்த காதுகுத்து பங்ஷன் மூலம் வேறு என்ன பிரச்சனை எல்லாம் வரப்போகுதோ என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், புதுசு புதுசா பிரச்சனை கிளப்புவது எப்படினு இந்த சீரியல் இயக்குநர் கிட்டதான் கத்துக்கணும் என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment