Advertisment

Tamil Serial Rating : என்ன கோபி சார் அடுத்த ஐடியா ரெடியா... கலக்குங்க...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : என்ன கோபி சார் அடுத்த ஐடியா ரெடியா... கலக்குங்க...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீட்டில் மீனா பண்றது எல்லாமே லேட்டாதான் எல்லாருக்கும் புரியுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா பெஸ்ட் நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் பேர சொன்னதும் மூர்த்தி ஏன் முகத்தை சுழிக்கிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் மூர்த்தி முகத்தை பார்க்கும்போதே கோபம் வருகிறர். இவரெல்லாம் மூத்த அண்ணன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா பேச வேண்டிய டைலாக் எல்லாம் இது பேசுது சீரியலே திருப்பி பார்த்த மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கட்ன பொண்டாடிய நம்பல இவ பேச்சை கேட்டுக்கிட்டு கண்ணம்மாலுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறான் பாரதி என்று கூறியுள்ளார். வெண்பா ஜெயில்ல இருந்தாலும் டைரக்டர் அவருக்கு சாதமாதான் கதை எழுதுகிறார் போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி வெண்பாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி நீங்களும் ராதிகாவ பார்த்துவிட்டீர்களா அப்போ உங்களுக்கு ஆப்புதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி குடும்பத்தோட சந்தோஷமா இல்லைனு ராதிகா உங்களுக்கு எப்படி தெரியும்?  யோசிக்க மாட்டீங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் போச்சிடா இவள வேற சமாளிக்கனுமா என்று கோபி நினைப்பது போல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியின் அடுத்த மூவ் என்ன என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகத்துக்கு பழைய ஞாபகம் வந்துரும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜுனுக்கும் செண்பகத்துக்கும் எதுவும் ஆக கூடாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த ரோஜாவுக்கு எப்போமே இதேதான் வேலையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அழுகாட்சி சீன எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்று கூறியள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவுக்கு எதுவும் ஆகாதா நடக்கர கெட்டது எல்லாமே நல்லவங்களுக்குதான் நடக்குமா? சீரியல்ல கூட நல்லவங்க நல்லா இருக்க விடமாட்டீங்க என்று கேட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரண்யா வழக்கமா நினைக்கிறது தானே இதுல புதுசா என்ன இருக்கு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யா எப்போவும் போலதா இருக்கு மாயனும் எப்பவும் போலதான் இருக்காரு இதுல வீட்ல இருக்கவங்களுக்கு என்ன டவுட் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் நடிப்பு சூப்பர் என்றே பதிவிட்டுள்ளனர்.

கயல்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் முதல்ல ஏதாச்சும் வேலையை பாருப்பா அப்புறம் வந்து கயல் கிட்ட கேள்வி கேட்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா சீரியல்லயும் இதே போர்கலம்தான் போகுது இதுல புதுசா நீங்க வேறயா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் உங்களுக்கும் புதுசா எதுவும் ஐடியா இல்லையா டைரக்டர் சார் இதே ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்க என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மேலும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு உண்மை தெரிந்துவிட்டதால் அந்த சீரியவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment