Advertisment

Tamil Serial Rating : சாந்தி முகூர்த்தத்துக்கும் கேஸ் கட்டுக்கும் என்னங்க சம்மந்தம்... இதெல்லாம் ஒரு காமெடி...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : சாந்தி முகூர்த்தத்துக்கும் கேஸ் கட்டுக்கும் என்னங்க சம்மந்தம்... இதெல்லாம் ஒரு காமெடி...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், நவீன் மாறுவேடம் சூப்பர் .. நாளையும் காமெடி எபிசோட் தான் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சாந்தி முகூர்த்தம் எப்போ வச்சுக்கலாம்ன்னு கேஸ் கட்டு பாத்து சொல்லுற .பர்ஸ்ட் சாமியார் நவீன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா நாடகத்தை2000 எபிசோடுகள் கொண்டு போனால் நிச்சயமாக நல்லா இருக்கும் சந்திரலோகா நாடகம் மாதிரி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன் பிளான் சூப்பர் என்று கூறியுள்ளனர். ஒருவழியா. பிரியாவ. வச்சி ‌. காமடி பண்ணி முடிச்சாச்சு. இப்போ. நவீனின். காமடியா நவீனின். மாறுவேடம். சூப்பர்.என்று ஒருவர் கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அட பாக்யா அம்மா நீங்க எங்க இங்க வந்தீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்படியே ராஜா ராணி கோஷ்டிய கூப்டீங்கனா ஸ்வீட் செய்து கொடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் முன்னாள் ரெண்டு சீரியல் வச்சி மகாசங்கம் ஏற்பாடு பண்ணீங்க இப்போ 3-வது சீரியலை கூட்டீங்களாக நடத்துங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரவாயில்லை 3 சீரியலையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் கண்ணம்மாவும் சமையல் தான் செய்யுராங்க அவங்களையும் கூப்பிடுங்க என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லை 3 பேரையும் காப்பாத்திட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மா ரோஷ்னி அளவுக்கு நேட்சுரலா இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த கண்ணம்மாவ பார்த்தா அஞ்சலிக்கு தங்கச்சி மாதிரி இருக்கு பழைய கண்ணம்மாவ போடுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கெல்லம் காரணம் வெண்பாதான் அப்படீனு எப்போ தெரியவரும் என்று கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் இதுக்கும் கண்ணம்மாதான் காரணம்னு சொல்லி பாரதி சண்டை போடுவானோ என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னாச்சு ஹிந்தில எல்லாம் சிங்கப்பூர் போவாங்களே இங்க போகல பட்ஜெட் பிரபலமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்னப்பா சீரியல் எடுக்குறீங்க அர்ச்சனா மட்டும்தான் இந்த ட்ரிப் வேண்டாம் வேண்டாம் னு சொல்லுது ஆன அதுமேல உங்களுக்கு டவுட்டே வரலையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கும் காரணம் சந்தியாதான் என்பது சிவகாமியின் வாதம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சான எப்போது மாட்டுவார் என்று கேட்டு வருகின்றனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நீ பண்ற காரியத்துக்கு உனக்கு மரியாதை ஒரு கேடு உண்மை தெரியும் போது இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி மாதிரி புருஷன் எல்லாம் செம்ம பாநிஷ்மன்ட் கொடுக்கனும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கொபியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் விறுவிறுப்பா போன சீரியலை ஏன் இப்படி மொக்க பண்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் பின்னாடியே வந்தீங்களே என் திட்டும் போது வேடிக்கை பார்க்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் மாஸ்டர் பிளான் அடுத்த எபிசோடுகள் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அஞ்சலி அகில் குழந்தை மூவரும் உயிர் பிழைத்துள்ளனர். இதன்பிறகு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்ளும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment