Advertisment

Tamil Serial Rating : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி - மைன்ட் வாய்ஸ் கோபி

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி - மைன்ட் வாய்ஸ் கோபி

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் விசாரணை சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் டைகர் மாணிக்கம் சொன்னதை கேட்டு பிரியாவின் ரியாக்ஷன் சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜாவை. ஜெயிலில் ‌அர்ஜுன் காப்பாற்றி இருந்தால் சாட்ஷிக்கு செமயான சாக்கா. இருக்குமே அப்படி நடந்திருந்தால் நல்லா இருக்குமே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜுனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கதிர் வேற லெவல் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தம்பிக்காக அண்ணன் சண்டை போடும் மாஸ் சீனுக்காக வெயிட்டிங் என்று குறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கதிருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில் ஒரு ரசகர் கண்ணன் பிரச்சனை சால்வாகிடுச்சி... இந்த ரௌடியால அவன் வீட்டிலயும் சேந்துட்டான் பாராட்டும் வாங்கிட்டான் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெண்பா இல்லை என்றால் சீரியல் நன்றாக போகும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீனுக்கு இது ஓகே சீக்கிரமா ரெண்டுபேரும் சேர்ந்துவிட்டால் சரிதான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போன என்ன அர்த்தம் இந்த 6 மாசத்தை 6 வருஷமா ஆக்க பிளான் பண்றீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலில் வெண்பானு ஒரு கதாப்பாத்திரம் சுத்திக்கிட்டு இருந்துச்சே அது எங்க இப்போ ஆளையே காணோம் என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த போட்டியை வைத்தே இந்த வார கதையை முடித்துவிட்டீர்களே இதையே அடுத்த வாரமும் தொடர்வீங்களோ என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன சரவணா அடுப்பு வேலை செய்யவில்லை என்று அப்போதே சொல்லியிருக்கலாமே ஏன் சந்தியாதான் அதை சொல்ல வேண்டுமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனாவும் ஆதியும் அந்த குடும்பத்தின் இரு துருவங்கள் என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் படத்துலயும் சரி, சீரியலுளையும் சரி,, புஷ்பாக்கு நல்ல கேரக்டரே கொடுக்க மாட்டாங்க போல!!!! என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சூப்பர் இத இதைத்தான் நான் மிகவும் எதிர் பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமனார் என்றால் அது இவர் தான் மருமகளை மகளாக நினைத்து கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்று கோபி நினைப்பது போல பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கோபியின் அப்பாவின் அதிரடி நடவடிக்கையே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment