Advertisment

என்ன ஜீவா இப்படி மாட்டிக்கிட்டீங்களே... தப்பிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்

Tamil Serial Update : தனது அப்பாவுக்கு போன் செய்யும் மீனா தான் கிளம்பி இருப்பதாகவும் வந்து அழைத்தக்கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லிவிடுகிறாள்.

author-image
D. Elayaraja
New Update
என்ன ஜீவா இப்படி மாட்டிக்கிட்டீங்களே... தப்பிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்

Tamil Serial Pandian Stores Update In Tamil : இந்த மாதிரி நேரத்துல தூங்கலாமா என்ன ஜீவா இன்னும் உங்களுக்கு பயிற்சி வேண்டும் என்று சொல்லும அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மாட்டிக்கொண்டார்.

Advertisment

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் இந்த சீரியலும் குடும்பத்தின் நடக்கும் சுவாரஸ்யமாக விஷயங்களை எடுத்து சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் மத்தியில் அதிகவனத்தை ஈர்த்து்ளளது.

சகோதர ஒற்றுமை,  மருமகள்கள் ஒற்றுமை பாசப்பினைப்பு உள்ளிட்ட பலவற்றை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. கந்த சில தினங்களுக்கு முன்பு கடை திறப்பு பிரச்சினை வைத்து கொஞ்சம் சீரயஸாக சென்ற எபிசோடுகள் தற்போது பிரச்சினையை முடித்து சற்று காமெடியாக சென்றுகொண்டிருக்கிறது.

இதற்கிடையே மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டை தற்போது பெரிய சண்டையாக ஏற்பட்டு இருவரும் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில பிறந்த நாள் வருகிறது. இந்த பிறந்தநாளில் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒரு மாதிரி இருவருக்கும் புடவை எடுக்கிறார் தனம்.

அதேபோல் மீனாவுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்று தம்பிகள் மற்றும் முல்லையிடம் டிஸ்கஸ் செய்கிறார் ஜீவா மேலும் இரவு 12 மணிக்கு பிறந்தவாள் விஷ் சொல்ல சொல்ல வேண்டும் என்று ஜீவா நினைக்க அதையே மீனாவும் எதிர்பாக்கிறாள். இதற்கிடையே கண்ணன் ஐஸவர்யாவுக்கு கிப்ட் வாங்க ஜீவா பணம் கொடுக்கிறான்.

இரவு 12 மணி ஆகிறது கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு பிறந்தாள் வாழ்த்துக்கள் சொல்லி கிப்ட் கொடுககிறான். ஆனால் இங்கு தூக்கத்தை கட்டுப்படுத்தி முழித்துக்கொண்டிருந்த ஜீவா கடைசி நிமிடத்தில் தூங்கிவிடுகிறான். இதனால் கோபமான மீனா இவனிடம் எதிர்பார்ப்பது தவறு என்று கூறி படுத்தவிடுகிறாள்.

காலையில் ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவருக்கும் புடவை கொடுக்கிறாள் தனம். அதன்பிறகு ஜீவா அங்கு வர நைட் தூங்கிட்டேன் என்று சொல்கிறான். இதனிடையே தனது அப்பாவுக்கு போன் செய்யும் மீனா தான் கிளம்பி இருப்பதாகவும் வந்து அழைத்தக்கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லிவிடுகிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட அழுத்தமாக பதிவு செய்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறியுளளனர். மேலும் பல வீடுகளில் கணவன்மார்கள் இப்படித்தான் அடிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள். என்று கூறி வருகினறனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment