Advertisment

Tamil Serial Rating : என்ன அர்ஜூன் சார்... சைடு கேப்ல மாநாடு எஸ்.ஜே சூர்யாவா மாறிட்டீங்களே...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : என்ன அர்ஜூன் சார்... சைடு கேப்ல மாநாடு எஸ்.ஜே சூர்யாவா மாறிட்டீங்களே...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வந்தான் சுட்டான் எஸ்கேப்பு வந்தான் சுட்டான் போனான் ரிப்பிட்டு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மெதுவாக அனுவை விசாரியுங்கள். அப்படியே எவ்வளவு காலம் இந்த கதையை இழு இழு என்று இழுக்க முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பிரியாவை விசாரிக்க வேண்டும் என்றதும்‌ ஏன்‌ ஜெயசீலன் பதறுகிறார்? உண்மை வெளி‌ வரும்‌ என்றா அல்லது தோல்வி பயத்தாலா? என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூனுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், சிலர் மாநாடு எஸ்.ஜே சூர்யாவை காப்பி அடிக்கிறார் அர்ஜூன் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதுக்கு பருத்திமூட்டை பேசாம குடோன்லயே இருந்துருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இருக்கு பிரச்சனை இருக்கு நாளைல இருந்து ரெண்டு சட்டி சோறு குழம்பு எக்ஸ்ட்ரா சமைக்கணுமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கதையில் வில்லன் இல்லை என்று ஜஸ்வர்யா வீட்டுக்கு வந்தச்சு... இனி தினமும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வரும் அதுக்கு காரணம் ஜஸ்வர்யா எனறு கூறியுள்ளார்.  வேலைக்கு போய் எப்படி சம்மாதிக்கப் போறேன் நெனச்சேன்.அப்பாடா..மூணு வேளை சோறு என்று கண்ணன் நினைப்பது போல பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா பேசுர பேச்சுக்கு சீக்கிரம் தனமே கழுத்த பிடிச்சு வெளிய தள்ள போகுது என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த சீரியல் முடியும் போது நாங்கள் உயிரரோட இருப்பமோ என்று சந்தேகமாக கிடக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்னப்பா ஃபன் பன்னிகிட்டு இருக்கீங்கள்.. சீக்கிரம் சீரியலை முடித்து வைக்க வேண்டும்... என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் இந்த சீரியல் முடியறதுக்கு முன்னாடி நாங்க எல்லாம் முடிந்து விடுவோம் போல என்று கூறியுள்ளார். அழகில் மயங்கி காதலில் விழுந்துவிடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் வாழப்போவது என்னமோ குணத்தை வைத்து தான் என்பதை மறவாதீர்கள்!! என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியலை சீக்கிரம் முடித்து வைத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி ஒரு மனைவிக்கு அப்படி ஒரு கணவன் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கோபி உங்க அப்பா பெரி ஆப்பு வைக்கிரார் போல என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்ய ஏன் இப்படி இருக்கீங்க உங்களுக்கு தைரியமே வராதா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்னமோ பண்ணுங்க ஆன உண்மை மட்டும் இப்போ தெரிய வராது அது மட்டும் சரியா சொல்லிவிடுவோம் என்று கூறியுள்ளனர். அதிலும் சில ரசிகர்கள் கோபி இதுக்கெல்லம் அசர ஆளே இல்லையே என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னதான் சரவணன் திட்டு வாங்கினாலும் அடுத்து அவர்தான் ஜெயிக்கிரமாதிரி காட்ட போறீங்க அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட்அப் கொடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்போ எந்த சீரியலும் ஹீரோவுக்கு சாதகமாக கதை இல்லை எல்லாம் வில்லிக்கு சாதகமாதான் எடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தயவு செய்து சீரியலை சீக்கிரம் முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளனா.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஒரு சீரியல்தான் நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு அதையும் ஆள்மாறாட்டம் செஞ்சி கெடுத்துட்டீங்களே என்று கெட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பரவாயில்லை மாறன் நல்லவன்தான்போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் வெளியில வந்தா மாறன் என்ன ஆவார் என்று கேட்டுள்ளனர். அதிலும் சில ரசிகர்கள் மாயன் வெளியில வந்தாலும் மாறனை மன்னித்துவிடுவார் என்று தான் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மூர்த்திக்கு பிடிக்காததை தனம் செய்வதால் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment