Advertisment

Tamil Serial Rating : ஒன்பது லக்கினத்தில் உச்சம் பெற்ற ஒருவன் ஒரு கோர்ட்டு சீன 100 எபிசோட் கூட எடுக்கலாம்...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial Rating : ஒன்பது லக்கினத்தில் உச்சம் பெற்ற ஒருவன் ஒரு கோர்ட்டு சீன 100 எபிசோட் கூட எடுக்கலாம்...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

தமிழும் சரஸ்வதியும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதுவே பரவாயில்லை.. பாரதி கண்ணம்மா மாதிரி இல்லமா விரு விருனு போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நான் இதை ஹாட்ஸ்டாரில் பார்த்துவிட்டேன். சரஸ்வதி வரும்போது இந்த மியூசிக் அதில் போடவில்லை என்று ஒருவர் கூறிள்ளார். தமிழிமும் சரஸ்வதியும் செம்மையா இருக்குபா பாரதி கண்ணம்மா பாக்குறதுக்கு இதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல் விறுவிறுப்பாக செல்வதாகவே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒன்பது லக்கினத்தில் உச்சம் பெற்ற ஒருவன் (டைரக்டர்) ஒரு கோர்ட்டு சீன 100 எபிசோட் கூட எடுக்கலாம்... என்று கூறியுள்ளார். பழைய கண்ணம்மா இருந்துருந்தா..6மாதம் சேந்து வாழும் பொது சூப்பர் ஹா இருந்துருக்கும் என கூறியுள்ளார். கன்னம்மால் இல்லாமல் இந்த சீரியல் நல்லாவே இல்லை என்றும் பழைய கண்ணம்மா இல்லாதது சீரியல் மீதான ஆர்வத்தை குறைத்தவிட்டது என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இந்த தீர்ப்பை இதை ஒரிஜினல் கண்ணம்மா ரோஷினி இருக்கும் போது கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தயவுசெய்து இப்படியே கொண்டு போங்க. ரோஜா தான் அனு என்று நிருபித்து கதையை கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனு வந்துடுச்சு இனிமே கதை ஜவ்வு மிட்டாய் மாதிரி இலுத்துட்டு போகும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பிரியா வந்ததும் பாட்டி மாணிக்கம் இருவரும் பழையபடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும். ஆனால் பிரியா பாட்டி அப்படின்னு சொன்னதும் பாட்டி உருகிடுவாங்களே.என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாட்டி இப்போது. ரோஜா மீது காட்டும் பாசம். உண்மையானதா யோசிக்க வேண்டும் ‌ என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லா சீரியல்லையும் இப்படி ஒரு பட்டி இருக்கத்தான செய்கிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஜெனி உங்க அம்மா அப்பா எப்படி விட்டாங்க என்று கேட்டுள்ளார். ஜெனி வந்துட்டா இனிமே செழியனை கையிலேயே புடிக்க முடியாது என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யா அம்மா சக்சஸ்புல் வுமன் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அன்னப்பூரணி ரோஜா ஏற்றுக்கொண்டதும், இப்போது அனு வீட்டிற்குள் வருவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Rating
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment