Advertisment

Tamil Serial Rating : எம்மா ஐஸ்வர்யா... ரொம்ப விவரமான ஆளுதான் நீ... முதல்நாளே இப்படியா?

Tamil Serial Rating : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கண்ணன் மீண்டும் இணைந்துவிட்ட நிலையில், சீரியலில் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : எம்மா ஐஸ்வர்யா... ரொம்ப விவரமான ஆளுதான் நீ... முதல்நாளே இப்படியா?

Tamil Serial Rating Pandian Stores Update : இல்லத்தரசிககளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களின் ஒன்று சீரியல். இவர்கள் மட்டுமல்லாது அலுவலகம் செல்லும் பலருக்கு சீரியல் ரசிகர்களாக உள்ளனர். இதற்கு ஏற்றாற்போல் தொலைக்காட்சிககள் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் பழைய சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே சில புதிய சீரியல்களை தொடங்கி வருகினறனர். அதேபோல் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

Advertisment

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சகோதர பாசம், கூட்டுக்குடும்பத்தின் நன்மைகள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடங்கிய இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் 4 சகோதரர்கள், ஒரு மளிகைகடை இதுவே இந்த சீரியலின் முக்கிய கதைக்கரு.

இதில் மூர்த்தி, ஜீவா, கதிர் என மூவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், 4-வது சகோதரர் கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டதால், மூத்த அண்ணன் மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன்பிறகு அவர்களின் அம்மா இறந்துவிட அப்போது கூட தம்பி கண்ணனை கூப்பிட மூர்த்தி மருத்துவிடுகிறார். இதனால் அண்ணன்களுடன் சேர வேண்டும் என்று தான் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வரும் கண்ணன் தனது அண்ணி மீனாவின் அப்பா நடத்தும் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்துகொண்டே படிக்கிறான்.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் பணம் காணால் போக அந்த பழி கண்ணன் மீது விழுகிறது. இந்த பழியை கடையில் இருக்கும் சிசிடிவி கேமரா மூலம் மீனா துடைத்துவிட, உண்மையாகவே பணத்தை திருடியவனை கதிர் மற்றும் ஜீவா இருவரும் அடித்துவிடுகினறனர். இதனால் ஆத்திரமடைந்த அவன ஆள் வைத்து கண்ணனனை அடித்த விடுகிறான். இதனால் தற்போது கண்ணன் அடிப்பட்டு தலையில் கட்டு போட்டுக்கொண்டு ஆபத்தான நிலையில் இருக்கிறான்.

இப்போவும் மூர்த்த தன் தம்பி கண்ணனை வீட்டிற்கு அழைக்காமல் இருக்க தனது கணவரின் பேச்சை மீறி தனம்கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வருகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், இதை பார்த்த மூர்த்தி எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்புகிறான். அதன்பிறகு தனம் ஜீவா, கதிர், மீனா முல்லை என அனைவரிடம் கண்ணன் இங்கே இருப்பது குறித்து கேட்க எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கூறிவிடுகின்றனர்.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கண்ணன் மீண்டும் இணைந்துவிட்ட நிலையில், சீரியலில் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் எபிசொடுகளில், ஐஸ்வர்யாவின் சுயரூபம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் தனம் அத்தை சொன்னதை செய்தேன் என்று சொல்லியிருந்தாலும் மூர்த்திக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால் இருவருக்குள்ளும் சண்டை வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறியள்ளனர்.

ஆனால் இதில் ஒரு சில ரசிகர் மூர்த்தி வெளியில் கோபமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாதான் இருப்பார். ஆனா என்ன இனிமே ஐஸ்வர்யா பண்ணப்போறத நினைத்தால் தான் சீரியல் எப்படி போகும்னு தெரியல என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு ரசிகர் கண்ணன் வீட்டோட சேர்ந்தாச்சு ஆன கஸ்தூரிய எங்க காணோம் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தனத்திற்கு பாராட்டையும்,  ஐஸ்வர்யா என்ன செயய போகிறார் என்று கேட்டுள்ளனர். இதனால் இன்றைய எபிசோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment