Advertisment

Tamil Serial Rating : வில்லன புடிச்சி கொடுத்த உடனே போலீஸ் வேலை கொடுக்கிறாங்க.. இது எந்த ஊர்லங்க...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வில்லன புடிச்சி கொடுத்த உடனே போலீஸ் வேலை கொடுக்கிறாங்க.. இது எந்த ஊர்லங்க...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன்ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா மட்டும் தான் நல்ல மருமகள். ஜீவாவும் மீனாவும் பேசுறது நல்லா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் அம்மா தேவையில்லாம சண்டையை உண்டுபண்ணுகிறார் என்று கூறியுளளார். மற்றொரு ரசிகர் மீனா மட்டும்தான் கண்ணனை பாசமா பாத்துக்கிறாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டு்ளளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா கேரக்டேரில் ரோஷினி தொடருந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீர்களா மாட்டீங்களா... என்று கேட்டுள்ளார். இதற்கு எல்லாத்துக்கும் காரணம் அந்த வெண்பா தான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நாடகம்.. நம்ம வாழ்வின் பொன்னான நேரங்களை அழிக்கும் அரக்கன்.. என கூறியுள்ளார். கொரோனா புண்ணியத்தில் போன லாக்டவுனில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்திருந்தது போல இந்த மழை வெள்ளப் புண்ணியத்தில் சேர்ந்து இருப்பாங்க பாப்பா கவலைப் படாதே என ஒருவர் கூறியுள்ளார். எப்படி யாவது சீரியல முடிங்கடா கெஞ்சு கேட்கிறோம் ரொம்ப கஷ்டமாக இருக்குது என ஒருவர் கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகா நீ பாத்தது நா இல்ல, என் தம்பி, அவன் பெயர் பாபி என்று சொல்லவது போலவும், அதற்கு ராதிகா அப்படியா கோபி நா அப்போவே நினைச்சேன்,அவரு உங்க அளவுக்கு அழகு இல்ல என்று சொல்வது போலவும் பதிவிட்டுள்ளார். இருக்கு சம்பவம் இருக்கு அதெல்லாம் என் தலைவன் கோபி சமாளிச்சுருவாப்ல என்று ஒருவர் கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கொஞ்சம் காமெடியாதான் இருக்கு ஆனா போக போக பழகிரும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சண்டை போட்டது சரவணன் ஆனா சந்தியாவுக்கு வேலை என்ன சார் இது என்று கேட்டுள்ளார். பல வருஷம் பரிட்சை லாம் எழுத வேணாம்.. வில்லன புடிச்சி குடுத்த உடனே போலீஸ் வேலை குடுக்கறாங்க.. என கூறியுள்ளார். 30 செகண்ட்ல எபிசோடு முடிச்சிட்டு கடைசில வெச்சிங்க பாருங்க ஒரு சீன்...உடனே போலீஸ் னு... அடேய் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படியே போனால் செம்பருத்தி கதைதான் ரோஜாவுக்கும் ,ரேட்டிங்கில் கடைசியில் போய் நிற்கும், ஹீரோயின் கஷ்டத்திலேயே இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது டைரக்டரே, மாத்தியோசிங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா அக்கா நீங்க பண்ற பரிகாரம் எல்லாம் சோதனைகளையும் வென்று விடுவீர்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் மற்றும் செண்பகம் அம்மாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் மாயன் ரொம்ப சூப்பர் இதைத்தான் நாங்கள் எதிர்பார்ததோம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாறன் ஏன் இப்படி சோகமாய்டடீங்க.. கவலைப்படாதீங்க மாயன் உங்க அண்ணன்தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சபாஷ் சரியான பதிலடி மாயன் மாஸ் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் இப்படித்தான் செய்வார் என்பது முன்பே தெரியும் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கோபி பற்றி ராதிகாவுக்கு தெரிந்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சரியலில் மாயன் மாறனுக்கு பதிலடி கொடுத்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment