சின்னத்திரையின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், 2010-ம் ஆண்டு வெளியான அண்டாரி பத்துவயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து, தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்த பிரியங்கா, நா சாமி ரங்கா, வெல்கம் டூ அமெரிக்கா, கிக் 2 உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்த பிரியங்கா நல்காரி, 2014-ம் ஆண்டு தெலுங்கில் மேகமலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 2018-ம் ஆண்டு தமிழில் ரோஜா சீரியலில் நடித்தார்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் ஒரிஜினல் பெயரான பிரியங்கா மறந்து அனைவரும் ரோஜா என்ஞறு அழைக்கும் அளவுக்கு இந்த சீரியல் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
அதோடு மட்டுமல்லாமல் ரோஜா சீரியலில் நாயகன் அர்ஜூன் – ரோஜா இடையேயான ரொமான்ஸ் சீனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இவர்கள் இருவருக்குமான ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்தது.
சமீபத்தில் ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்நதனர். அதே சமயம் அர்ஜூன் ரோஜா இருவரும் அடுத்து என்ன சீரியலில் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று பிரியங்காவின் அடுத்த சீரியல் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.