Advertisment

Suntv Serial : அர்ஜூனிடம் மாட்டுவாரா நீலாம்பரி? ஆபத்தில் சாந்தமூர்த்தி...!

Tamil Serial Update : அர்ஜூன் சந்திரகாந்தா போகும் இடமெல்லாம் நீலாம்பரி வந்து நோட்டம் பார்க்கிறார் ஆனால் அதை யாரும் கவனிப்பதில்லை.

author-image
D. Elayaraja
New Update
Suntv Serial : அர்ஜூனிடம் மாட்டுவாரா நீலாம்பரி? ஆபத்தில் சாந்தமூர்த்தி...!

Roja Serial Rating Update : அனு கதை முடிஞ்சி இப்போ நீலம்பரி யாருனு தேடிக்கிட்டு இருக்க மாதிரி கதையை கொண்டுபோறீங்களே... நீலாம்பரி ஜெயில்ல தான இருந்தாங்க அங்க போய் பழைய ரெக்காடு செக் பண்ணா அவர் யார்னு தெரியாதா என்ன?

Advertisment

இது சன்டிவியின் ரோஜா சீரியல் கதை. ஒவ்வொரு சீரியலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் கதையை நகர்த்தி கொண்டுபோக... இதில் ஒரு உண்மையை கண்டுபிடிக்க 1000 எபிசோடுகளுக்கு மேல் எடுத்தக்கொண்ட அபூர்வ சீரியல்தான் ரோஜா. அப்போவும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், வில்லி இன்னும் வீட்டிற்குள்தான் இருக்கிறாள்.

அனு தன் வீட்டு பொண்ணு இல்லை என்று ஏறக்குறைய நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அவர், இந்த குடும்பத்தை பழிவாங்க லாயருடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம், அனு ரோஜா இருவரையும் கொல்ல நீலாம்பரி என்ற புதுவில்லி களத்தில் குதித்துள்ளார். இதில் நீலாம்பரி செய்த குற்றத்திற்காக சிறுவயதில் அனு ரோஜா இருவரும் சாட்டி சொல்லியதால் அதற்கு பழிவாங்க வந்திருக்கிறாள்.

ஆனால் இவர்கள் யாருக்குமேநீலாம்பரி எப்படி இருப்பாள் என்று தெரியாது. அடையாளமே தெரியாத ஒரு ஆளை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்? அதேபோல், நீலாம்பரி சிறையில் இருந்து இப்போதான் விடுதலையாகி இருக்கிறார். அப்படி பார்த்தால் சிறையில் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காதா? அர்ஜூன் சந்திரகாந்தா போகும் இடமெல்லாம் நீலாம்பரி வந்து நோட்டம் பார்க்கிறார் ஆனால் அதை யாரும் கவனிப்பதில்லை.

இப்படி இருக்க அனு ரோஜா சிறுவயத்தில் தங்கியிருந்த ஆசிரமத்தின் சாந்தமூர்த்திக்கு மட்டுமே நீலாம்பரி யார் என்பது தெரியும். அவரையும் இப்போது ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்துவிட்டார்கள். அவரை கொல்ல வரும் நீலாம்பரி எனக்கு எதிராக சாட்சி சொன்னது யார் என்று கேட்கிறாள் அதை அவர் சொல்ல மறுக்க அவரை கொலை செய்ய கழுத்தை நெறிக்கிறாள் அந்த நேரத்தில் அர்ஜூன் ரோஜா அங்கு வருவது குறித்து தகவல் தெரிய நீலாம்பரி அங்கிருந்து கிளம்புகிறாள். அப்போது சாந்தமூர்த்தி அவளது கையை பிடித்து இழுக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகாகள் பலரும் நீலாம்பரி மாட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் நீலாம்பரி மாட்டுவாரா அல்லது தப்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அவர் தப்பிக்கவே அதிக வாய்ப்புண்டு. ஏனென்றால் அப்போதூன் இதை கண்டுபிடிக்க இன்னும் 1000 எபிசோடுகள் கடக்க முடியும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment