Advertisment

Sun TV Serial: ரோஜா மீது திருட்டுப் பழி; திடீர் ட்விஸ்ட் கொடுத்த அர்ஜுன்!

Tamil Serial Update : சன்டியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Sun TV Serial: ரோஜா மீது திருட்டுப் பழி; திடீர் ட்விஸ்ட் கொடுத்த அர்ஜுன்!

Sun TV Roja Serial Today Episode : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்த என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் காணலாம்.

Advertisment

ரோஜாவை அண்ணபூரணி வீட்டில் இருந்து வெளியேற்ற தீவிரமாக வேலை செய்து வரும் அனு, சொன்னபடி கல்பனாவை மண்டபத்தில் இருக்காமல் செய்ய, மாத்திரை எடுப்பதை போல் ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கிறாள் அன்னப்பூரணி. இதை கேட்டு அறை உள்ளே செல்லும் கல்பனாவை, கூடவே சென்ற யசோதாவும் பாலுவும் உள்ளே வைத்து பூட்டுகின்றனர். இதனால் உள்ளே மாட்டி கொள்ளும் கல்பனா அடுத்து என்ன செய்துவது என்று தெரியாமல் திகைக்கிறாள். அவளது கையில், போனும் இல்லாத்தாக பதற்றமாகிறாள்.

அடுத்து ரோஜாவிடம் வரும் அனு, என் நெக்லஸ் காணாம்னு ரெண்டு நாளா தேடிட்டு இருக்கேன். நீ என்ன கழுத்துல போட்டிருக்க என்கிறாள். அப்போது அவள் இது எனக்கு அன்னப்பூரணி பாட்டி கொடுத்தது. நீயும் தான பக்கத்துல இருந்த என சொல்கிறாள். அப்போது அங்கு வரும் அன்னப்பூரணி, நான் எப்ப உன்கிட்ட கொடுத்தேன். நடிக்குறியா என கேட்கிறாள்.



அப்போது பிரதாப், மாணிக்கம் அனைவரும் வந்துவிட,, இந்த பர்த்டே பங்ஷனை கெடுக்கனும்னு ஏதோ பிளான் பண்றாங்க என அன்னப்பூரணி சொல்கிறாள். இதை கேட்ட மாணிக்கம், இதுக்குதான் நான் இவுங்க ரெண்டு பேரையும் இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன் என சொல்கிறான். அப்போது பிரதாப் கல்பனாவை தேடுகிறான். இதை பார்த்த மாணிக்கம், அவ வந்தாலும் ரோஜாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவா, என் மகளோட நகையை திருடுனதுக்கு இவ மேல கேஸ் கொடுத்து போலிஸை வர சொல்ல போறேன் என மாணிக்கம் சொலகிறான்.

அப்போது அதெல்லாம் வேணாம். நான் மொத போய் கல்பனாவை கூட்டிட்டு வர்றேன் என பிரதாப் கிளம்பியவுடன், நீ இந்த பங்ஷன்ல இருக்கக்கூடாது என சொல்லி அனு ரோஜாவை வெளியே பிடித்து தள்ளுகிறாள். அப்போது கரெக்டாக எண்ட்ரி ஆகும், அர்ஜுன் அவளை பிடிக்கிறான். அடுத்து கல்பனா இருக்கும் அறையை அடையும் நெருங்கி பிரதாப், டூப்ளிகேட் சாவியை வைத்து அவளை மீட்டெடுக்கிறான்.

அப்போது அங்கு நடந்த விஸயங்களை பற்றி பிரதாப் கல்பனாவிடம் கூற, பதறியடித்து ஓடி வரும் கல்பனா, நீங்க தான ரோஜவிற்கு கொடுத்தீங்க என சொல்கிறாள். அப்போது அர்ஜூன், மிஸ்டர் டைகர் மாணிக்கம் என் பொண்டாட்டி மேல திருட்டு பட்டம் கட்ட பிளான் பண்ணி இதெல்லாம் பண்ணி இருக்காங்க, நீங்களும் அதற்கு உடந்தையாக இருந்து இருக்கீங்க என அர்ஜுன் சொல்கிறான். அதன்பிறகு அங்கு வரும் அர்ஜுன் ஆள் நகையை செக் பண்ணி இது கவரிங் நகை என சொல்கிறான்.



இந்த டூப்ளிகேட் நகைக்காக என்னோட பொண்டாட்டியை இந்த சபைல கேவலப்படுத்தி இருக்கீங்க என சொல்லும் அர்ஜுன், அவளுக்காக வாங்கிட்டு வந்த நெக்லஸை போட்டு விடுகிறான். அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, என்னோட பர்த்டே கிஃப்ட் என சொல்கிறான். அப்போது சந்திரகாந்தா, ஜட்ஜ் அனைவரும் வருகின்றனர். ரொம்ப நாளா உங்க குடும்பத்துல நடக்கற குழப்பத்தை தீர்க்க தான் நாங்க இங்க வந்திருக்கோம் என சந்திரகாந்தா சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Roja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment