Advertisment

Roja Serial : அனுவை கடத்தும் அர்ஜூன் : டைகர் மாணிக்கம் கண்டுபிடிப்பாரா?

Tamil Serial Update : சன்டிவியின் ரோஜா சீரியல் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Roja Serial : அனுவை கடத்தும் அர்ஜூன் : டைகர் மாணிக்கம் கண்டுபிடிப்பாரா?

Roja Serial Promo Update : சின்னத்திரையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் ரோஜா. இதில் அனுவை கொலை செய்ய முயன்றதாக ரோஜா சிறையில் இருக்க அர்ஜூனும் 2 நாட்கள் சிறையில் இருகிறார். நேற்றைய எபிசோட்டில் சிறையில் நடைபெற்ற ரோஜா சாக்ஷி இடையேயான சண்டைக்காட்சிகள் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து கதையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

Advertisment

அந்த எதிர்ப்பார்ப்பை ஓளரவிற்கு பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ரோஜா சீரியலின் இன்றைய ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் அர்ஜூன் அனுவை கடத்துகிறார். சிறையில் இருக்கும் ரோஜாவின் உயிரை காப்பாற்றிய அர்ஜுனுக்கு காயம் ஏற்படுவதால், சந்திரகாந்தா அனு சிகிச்சை பெற்று வரும் அதே ஹாஸ்பிடலுக்கு அர்ஜூனை அழைத்துச்செல்கிறார். அப்போது ரோஜாவை காப்பாற்ற அனுவை கடத்த திட்டம் போடும் அர்ஜூனுக்கு சந்திரகாந்தா உதவி செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து அனுவை கடத்தும் திட்டத்தில் களமிறங்கும் அர்ஜூன், யாருக்கும் தெரியாமல் அனுவை வீல் சேரில் வெளியில் கூட்டி வருகிறார். அப்போது சந்திரகாந்தா, டைகர் மாணிக்கத்திடம் ரோஜா உயிருக்கு மட்டும் ஏதாவது ஆச்சினா என்று சொல்ல,  டைகர் மாணிக்கம் மிகவும் ஆவேசமாக என் மகளை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார்.



அப்போது டைகர் மாணிக்கம் பின்னால் அர்ஜூன் அனுவுடன் லிப்டில் உள்ளார். இத்துடன் இந்த ப்ரமோ முடிவுக்கு வருகிறது. இதில் அனுவை அர்ஜூன் வெற்றிகரமாக கடத்துவாரா அல்லது டைகர் மாணிக்கத்திடம் சிக்குவாரா என்பது இன்றைய எபிசோட்டில் தெரியவரும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment