Advertisment

கோபியிடம் மன்னிப்புக் கேட்கும் இனியா... ஆனால் உண்மையை சொல்லவே இல்லையே!

Tamil Serial Update : விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
கோபியிடம் மன்னிப்புக் கேட்கும் இனியா... ஆனால் உண்மையை சொல்லவே இல்லையே!

Tamil Serial Update Baakiyalakshmi Serial Iniya Today : சின்னத்திரையில் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் பாக்யலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப தலைவி ஒருவரின் வாழ்கை போராட்டத்தை பற்றிய இந்த சீரியல் தொடக்கத்தில் சரியாக போகவில்லை என்றாலும், தற்போது இல்லத்தரசிக்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக வலம்வருகிறது. இதில் கடந்த வார எபிசோட்டில் பாக்கியலட்சுமியின் மகள் இனியா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதால் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். மகள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் அனைவரும் அவரை பல இடங்களில் தேடுகின்றனர்.

அதன்பிறகு பாக்கியலட்சுமியின் மருமகள் ஜெனியின் அப்பா கொடுத்த தகவலில் இனியா நண்பர் வீட்டில் இருப்பது தெரிந்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது மொத்த குடும்பமும் இனியாவை நிற்கவைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா ஏன் இப்படி பண்ண என கேட்டு பாக்யா அவரை அடிக்கிறார். ஆனால் அவரது குடும்பம் அவரை  தடுக்கின்றனர். அதற்கு தாத்தா அவர் கேட்பதில் என்ன தப்பு என கூறுகிறார். பாட்டியும் அவரை திட்டுகிறார்.

அதன்பிறகு ’ஏன் பரிச்சை எழுதல’ என கேட்க என்று பாட்டி கேட்க அதற்கு இனியா , ‘படிக்கல பாட்டி அதனால தான்’ என சொல்கிறார். ஏன் படிக்கல என கூறி மீண்டும் பாக்யா அடிக்கிறார். அனைவரும் திட்டிக்கொண்டிருந்த்தால், அழுதுகொண்டிருக்கும் இனியாவை அண்ணன் செழியன் தான் ஆறுதல் படுத்துகிறார். அதன் பின் இனியாவுக்கு ஆதரவாக பேசும் கோபி, இனியா தெரியாமல் தவறு செய்துவிட்டாள், பயத்தில் வீட்டுக்கு வரவில்லை, இதை பிறகு பேசி சரிசெய்து கொள்ளலாம் என சொல்கிறார். அதன் பின் இனியாவை அவரது அறைக்கு அனுப்புகிறார்கள். அவர் சாப்பிடாமல் இருப்பதால் ஜெனி அவருக்கு சாப்பாடு கொடுக்கிறார்.

அதன் பின் பொறுமையாக சென்று இனியாவிடம் பேசும் கோபியிடம், கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கிறார் இனியா. இனியாவிடம் மிகவும் வருத்தமாக பேசுகிறார் கோபி. ஆனால் இப்போது கூட சினிமாவுக்கு சென்றது பற்றி இனியா கூறவே இல்லை. இதோடு இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. நாளை அவர்கள் பள்ளிக்கு போகும் போது பாக்யலட்சுமி குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment