Advertisment

Vijay TV Serial : வெண்பாவை வெறுப்பேற்றிய பாரதியின் சர்ப்ரைஸ்... இது தேவை தான்

Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : வெண்பாவை வெறுப்பேற்றிய பாரதியின் சர்ப்ரைஸ்... இது தேவை தான்

சித்தி கொடுமையால் காயமடைந்த குழந்தையின் தந்தையிடம் பேசும் வெண்பா, உங்களை நம்பி வாழ வர்ற பொண்ணு நீங்க பெத்து போட்ட குழந்தைக்கு ஆயா வேலை பார்க்குறது தானா? போய் மொத உங்க குழந்தையை ஹாஸ்ட்டல்ல சேருங்க என சொல்கிறாள். இதை கேட்டு கடுப்பாகும் பாரதி,  இவள நாம கல்யாணம் பண்ணிருந்தா ஹேமாவையும் இப்படி தான பண்ணுவா, என யோசித்து அங்கிருந்து கிளம்புகிறான்.



ஆனால் இதை கவனித்த வெண்பா, உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ பார்த்துட்டு கண்டுக்காம போறியே என கேட்கிறாள். சாரி வெண்பா என் சொல்லும் பாரதி, இன்னைக்கு ஈவ்னிங் ஹேமா பர்த்டே பங்க்ஷன் இருக்கு வந்துடு என சொல்கிறான். இதை கேட்டு கடுப்பாகும் வெண்பா, இதை சொல்லத்தான் கூப்பிட்டியா என கேட்கிறாள். ஆமா நீ வேற என்னை நினைச்ச என பாரதி கேட்கிறான்.  அதன்பிறகு பாரதி கிளம்பியவுடன், இவன் எதையோ மனசுல வைச்சு பேசுறான். என்னான்னு தெரியலையே என யோசிக்கிறாள் வெண்பா.

Advertisment

இதற்கிடையே என்னையே கட்டிப்போட்டு தப்பிச்சுட்டீல, உன்னை கொல்லாம விட மாட்டேன் சீக்கிரம் உனக்கு முடிவு கட்றேன் என துர்கா யோசித்தக்கொண்டிருக்கிறான். அடுத்து கண்ணம்மா லட்சுமியை வீட்டிற்கு அனுப்ப சம்மதித்ததை சந்தோஷமாக அகில் மற்றும் வேணுவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள் சௌந்தர்யா. அப்போது பர்த்டே பங்க்ஷன்ல வைச்சு, ஹேமாவும் கண்ணம்மாவோட பொண்ணு தான்னு உண்மைய சொல்லிடாலமா என வேணு கேட்கிறான்.

ஆனால் இப்போ வேண்டாம் காலம் கனிஞ்சு வரட்டும் எல்லாத்தையும் சொல்லலாம் என சௌந்தர்யா சொல்கிறாள். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் வெண்பாவிடம் சாந்தி, ஜாலியா இருந்தீங்களா அம்மா, எங்கெல்லாம் போனீங்க என கேட்கிறாள். அவள் கடுப்பில் நடந்த எல்லாவற்றை சொல்கிறாள். அதன்பிறகு நீங்க கண்டிப்பா பிறந்தநாள் விழாவுக்கு போயிட்டு வாங்கம்மா என சாந்தி சொல்கிறாள். அதற்கு வெண்பா போய்தான் ஆகணும். பர்த்டே பங்க்ஷனுக்கு வரவங்க சீரியஸான விஷயத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணாம இருக்க, நான் அங்க போய்தான் ஆகணும் என சொல்கிறாள்.



இதற்கிடையில் அவசரப்பட்டு லட்சுமியை அனுப்ப முடிவு பண்ணிட்டோமோ என கண்ணம்மா, யோசித்து கொண்டிருக்கும்போது, அங்கு வரும் துளசி என்ன யோசிச்சுட்டு இருக்க என கேட்கிறாள். இன்னைக்கு ஹேமாக்கு பர்த்டே பங்க்ஷன்க்கு லட்சுமியை அனுப்புறேன் சொல்லிட்டேன். அதான் குழப்பமா இருக்கு என சொல்கிறாள். இதுல என்ன குழப்பம் இருக்கு என துளசி கேட்கும் போது, அவருக்கு லட்சுமி என் பொண்ணுன்னு தெரியாததால தான் அவர் லட்சுமி மேல பாசமா இருகாரு, ஓர் வேளை உண்மை தெரிஞ்சுட்டா என்னாகும்ன்னு பயமா இருக்கு என சொல்கிறாள்.

அதான் சௌந்தர்யா மேடம் உண்மை எதுவும் தெரியாம பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்கள்ள அப்புறம் என்ன உனக்கு பயம் என துளசி கேட்கிறாள். நேத்து புல்லா உன்னோட லட்சுமி இருந்தா, இன்னைக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா கூட அவ அவளோட பிறந்த நாளை கொண்டாடட்டும் என சொல்கிறாள். லட்சுமி வந்ததும் அவர் வாங்கி கொடுத்த டிரஸ்சை போட்டுவிட்டு அனுப்பலாம்ன்னு இருக்கேன் என கண்ணம்மா சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment