Advertisment

Vijay TV Serial: வெண்பாவிடம் அதை கொடுக்க வேண்டாம்; திசை மாற்றிய கண்ணம்மா!

Tamil Serial Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: வெண்பாவிடம் அதை கொடுக்க வேண்டாம்; திசை மாற்றிய கண்ணம்மா!

Bharathi Kannamma Serial Today Episode : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் காணலாம்.

Advertisment

கடந்த இரண்டு வாரங்களாக பாரதியியின் மெடிக்கல் ரிப்போர்ட் கண்ணம்மாவின் பக்கம் சுற்றி வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றைய எபிசோட்டின் இறுதியில் ஆட்டோ டிரைவர் குமார் அந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு சௌவுந்தர்யா வீட்டிற்கு செல்கிறார். இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில்,  ஆட்டோ டிரைவர் குமார் எடுத்துச்செல்லும் மெடிக்கல் ரிப்போர்ட்டை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெண்பா ஆட்டோவின் பின்னாடியே போகிறாள். 

இதற்கிடையே குமாருக்கு போன் செய்யும் கண்ணம்மா, எங்கு இருக்கிறார் என கேட்கிறாள். அப்போது லட்சுமி தன்னை சௌந்தர்யா வீட்டிற்கு அனுப்பியதை பற்றி சொல்கிறார். ஆனால் கண்ணம்மாவோ, நீங்க அங்கு போக வேண்டாம் பாரதியின் ஹாஸ்பிட்டலுக்கு சென்று அவனிடம் கொடுத்து விடுங்கள் என சொல்கிறாள். இதனையடுத்து மருத்துவமனைக்கு வரும் குமார், பாரதியை சந்தித்து லட்சுமி அனுப்பி வைத்ததாக சொல்லி பைல்லை கொடுக்கிறான்.

அந்த ரிப்போர்ட்டை வாங்கிக்கொள்ளும் பாரதி வெண்பாவிற்கு போன் செய்து ரிப்போர்ட் தன்னிடம் இருப்பதை பற்றி சொல்கிறான். அதில் என்னதான் இருக்கு என பாரதி திறந்து பார்க்க போகும் பொது, வெண்பா கரெக்ட்டாக வந்து வாங்கி விடுகிறாள். அடுத்து அகில் அஞ்சலிக்காக டிரெஸ் வாங்கிட்டு வந்து கொடுக்கிறான். புது டிரெஸ்ஸை போட்டு பார்க்கும் அஞ்சலி பத்தவில்லை என்கிறாள். அதன்பிறகு நீயும் கூட வா நம்ம போய் மாற்றிவிட்டு வரலாம் என சொல்கிறான்.



இதற்கிடையில் மத்திய சாப்பாட்டிற்காக ஹேமாவும், லட்சுமியும் வெயிட் பண்ணுகின்றனர். அப்போது, ஹேமாவை வைத்து எப்படி சாப்பாட்டை லட்சுமியிடம் கொடுப்பது என யோசித்து கொண்டு நிற்கிறாள். அதன்பிறகு லட்சுமியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, ஹேமா அருகில் போகிறாள் கண்ணம்மா. அப்போது இன்னைக்கு மட்டும்தான் உங்க கையாள சாப்பிட முடியும் என்று ஹேமா கூறுகிறாள்.  அதற்கு  ஏன்மா என கண்ணம்மா கேட்கிறாள். அப்போது அப்பா வெளியே சமைச்சு சாப்பிட வேண்டாம் என சொன்னதை பற்றி சொல்கிறாள்.

அதன்பிறகு ஹேமா, கண்ணம்மாவிடம் சாப்பாடு ஊட்டி விடுமாறு கேட்கிறாள். அருகில் லட்சுமி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறாள். கண்ணம்மா ஹேமாவிற்கு மட்டும் சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அப்போது ஹேமா, இவ என் பிரெண்ட் லட்சுமி இவளுக்கு இவுங்க அம்மா சாப்பாடு கொண்டு வரலை, நீங்க ஊட்டி விடுறீங்களா என கேட்கிறாள். அதன்பிறகு கண்ணம்மா இருவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அடுத்து அகில் டிரெஸ் எடுத்து கொடுத்ததை அஞ்சலி சௌந்தர்யாவிடம் சொல்கிறாள். அதற்கு சௌந்தர்யா, நீங்க இப்படி ஒற்றுமையா இருக்குறதை பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியாக இருப்பதாக சொல்கிறாள்.

அப்போது வீட்டிற்கு வரும் கோவில் குருக்கள் சௌந்தர்யாவிடம் குல தெய்வ கோவிலில் நடந்த அர்ச்சனைக்கான பிரசாதத்தையும், விபூதியையும் கொடுத்து, உங்க வாரிசு எல்லாத்த்துக்கும் உங்க கையால கொடுத்துருங்க என சொல்கிறார். அதன் பிறகு அகிலும், சௌந்தர்யாவும் பிரசாத்தை எடுத்து கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment