Advertisment

Sun TV Serial: கார்த்திக்கை தேடிப் புறப்பட்ட மாமனார் மீது அட்டாக்; சுந்தரி ஷாக்!

Tamil Serial Update : சன்டியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Sun TV Serial: கார்த்திக்கை தேடிப் புறப்பட்ட மாமனார் மீது அட்டாக்; சுந்தரி ஷாக்!

Suntv Serial Sundari Today Episode : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படிப்பில் ஆர்வம் உள்ள ஒரு இளம் பெண் திருமணத்திற்கு பின் தனது படிப்பை தொடர அவர் மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில், வீட்டில் நேரத்தை வீணாக்காமல் எதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கும் சுந்தரி, பழைய சோறை வற்றலாக காயவைத்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவரது பாட்டி நாளைக்கு தயாராக இரு, நாம் வெளியில் சென்று வருவோம் என சொல்கிறார். அப்போது அங்கு வரும் சுந்தரியின் மாமியாரும் வெயில் ஜாஸ்தியாக இருக்கிறது என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

அப்போது சுந்தரியின் பாட்டி, 'வள்ளியம்மா அப்படி தான் பேசுவார், ஆனால் மனதில் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார். பிள்ளை நல்லா இருக்கனுமே என அப்படி பேசுகிறார்' என சுந்தரியின் மாமியாரிடம் கூறுகிறார். சென்னையில் வீடு பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் போல, கூடிய சீக்கிரம் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன் என பாட்டிக்கு வாக்கு கொடுக்கிறார்.



அதன் பின் சுந்தரியின் மாமனாரும், மாமியாரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளை வந்தார்.. சுந்தரியை வேலைக்காரியாக அனுப்பவில்லை என அவர் சொன்ன ஒரு வார்த்தை சங்கடத்தை தந்தது என அவர் சொல்கிறார். இப்போ வீட்டில் இருப்பவர்கள் கேட்கிறார்கள், இனி போனில் பேசுவது சரியாக படவில்லை. அதனால் நானே சென்னைக்கு போய் பேசி அவனை கையேடு கூட்டி வருகிறேன் என சுந்தரியின் மாமனார் கூறுகிறார்.

மறுநாள் சுந்தரியும், பாட்டியும் சேர்ந்து ஒரு பெரிய கடைக்கு சென்று அங்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி என அனைத்தையும் பார்த்துக்கொண்டு ஜூஸ் கொடு என சேல்ஸ்மேனை வேலை வாங்குகின்றனர்.  இறுதியில் பில் போடலாமா என கேட்கும்போது. 'அது எதுக்கு. நாங்க ஏன் பில் போடணும். இதை எல்லாம் ஏற்கனவே மாமன் முருகன் வாங்கி வைத்துவிட்டார்கள். அது எப்படி வேலை செய்கிறது என பார்க்க தான் வந்தோம்' என கூறி சேல்ஸ்மேனுக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.



அடுத்து சென்னைக்கு செல்ல தயாராகும் சுந்தரியின் மாமனார் தோப்பில் பம்புசெட் பிரச்சனை என சொன்னதால் அங்கு போகிறார். அப்போது அங்கு வரும் ரௌடிகள் அவரை தாக்குகின்றனர். இதனால் காயமடைந்த அவர் ஐசியூவில் இருப்பதாக சுந்தரிக்கு போன் வர கடும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment