Advertisment

காலில் விழுந்தும் கரையாத ராதிகா... விரக்தியில் ராஜேஷை பின்னி எடுத்த கோபி

Tamil Serial Update : ராதிகாவின் முன்னாள் கணவன் கோபியிடம் கிண்டலாக பேசுகிறார். இதனால் ஆத்திரமடையும் கோபி. அவனை அங்கேயே வெளுத்து வாங்கிவிட்டு சென்றுவிடுகிறார்.

author-image
D. Elayaraja
New Update
காலில் விழுந்தும் கரையாத ராதிகா... விரக்தியில் ராஜேஷை பின்னி எடுத்த கோபி

Tamilகாவி Serial Baakiyalakshmi Rating Update : ராதிகா இப்படியே இருந்தா சீரியலுக்கு நல்லது சீரியல் பாக்குர ஆடியஸ்க்கும் நல்லது ஆனால் ராதிகா பாக்யாவுக்கு வில்லியா மாறுனா இப்படி டிஆர்பி வீழ்ச்சிதான் பாத்துக்கோங்க டைரக்டரே என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமி சீரியல்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்ப கதையாக இருந்தாலும் தொடக்கத்தில் சரியான வரவேற்பு இல்லாத இந்த சீரியலில். இன்று நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை ஆங்காங்கே திரைக்கதையாக வைத்து கவனம் ஈர்த்ததை தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை கோபி கேரக்டரும், கணவன் என்ன செய்தாலும் அவரை எதிர்த்து கேட்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பாக்யா கேரக்டரும் உணர்த்துகினறன. பாக்யாவின் கணவரான கோபி பாக்யாவை விட்டுவிட்டு தனது முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்

ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாக்யாவும் ராதிகாவும் க்ளோஷ் ப்ரண்டு என்று தெரிந்தும் தான் பாக்யாவின் கணவன் என்பதை கோபி மறைத்தவிட்டார். இப்போது இந்த உண்மையை தெரிந்துகொண்ட ராதிகா கோபியை வெறுக்க தொடங்கிவிட்டாள். ஆனாலும் கோபி விடுவதாக இல்லை. அடிக்கடி ராதிகா வீட்டுக்கு போய் அவளிடம் திட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைத்ததற்கு வலிமையான காரணம் ராதிகாவின் அம்மா சில நாட்களாக ஊரில் இல்லாத அவர் இப்போது கோபியை திருமணம் செய்துகொள்வது சரிதான் என்று சொல்லும் அளவுக்கு ராதிகாவை மைண்ட் வாய்ஸ் செய்கிறார். இதனால் ராதிகா குழப்பமடைகிறாள்.

ஆனாலும் கோபியை பார்த்தாலே கடுப்பாகி வரும் ராதிகா இன்றைய ப்ரமோவில் எல்லை மீறி சென்றுவிட்டார். முதலில் ராதிகா வீட்டுக்கு வரும் கோபி, அவளின் காலில் விழுந்துவிட்டார். ஆனால் ராதிகா அவனை வெளியில் போக சொல்லி தள்ளி விடுகிறார் பிறகு மயூவிடம் பேச போக அப்போதும் ராதிகா தடுத்துவிடுகிறாள். இதை எதேர்ச்சையாக அங்கே வரும் ராதிகாவின் முன்னாள் கணவன் கோபியிடம் கிண்டலாக பேசுகிறார்.

இதனால் ஆத்திரமடையும் கோபி. அவனை அங்கேயே வெளுத்து வாங்கிவிட்டு சென்றுவிடுகிறார். அப்போது வெளியில் வரும் அவளின் முன்னாள் கணவன் நா குடிகாரனு என்ன விட்டுட்டு அவன் கூட சுத்துன இப்போ அவனை விரட்டிவிட்டு யார்கூட சுத்த போற என்று கேட்க ராதிகா கோபமாக பார்க்கிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

கோபி ராதிகா பழக்கம் ஏறக்குறைய அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் தெரியவேண்டிய முக்கியமான ஆளான பாக்யாவுக்கு இன்னும் தெரியவில்லை. கோபி வேறு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரியும் ஆனால் அது ராதிகாதான் என்று யாரும் சொல்லவில்லை. எப்படி இருந்தாலும் உண்மை தெரிந்தால் பாக்யாவின் ரியாக்ஷன் அழுகைதான் மற்றடி வேறு என்ன செய்யப்போகிறார் இதை ஏன் அவருக்கு தெரியாமல் இவ்வளவு ரகசியமாக வைக்க வேண்டும் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

Baakiyalakshmi Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment