ஹோட்டலில் அமர்ந்திருக்கும் ஹரிகிருஷ்ணன் இஞ்சி டீ கேட்கிறார். ஆனால் ஹோட்டல்ஊழியர் சக்கரை இல்லாமல் காபி கொண்டு வந்து வைக்கிறார். இதனால் அவனுக்கு என்ன ஆச்சு என மானேஜர் மேடியை கேட்கிறார். அதற்கு அவர் நேற்று பெண் பார்க்க போனதாகவும், அதில் இருந்தே அவர் இப்படி தான் இருக்கிறான் என சொல்கிறார்.
இதை கேட்டு ஹரிகிருஷ்ணன், ஊழியரை அழைத்து பேசும்போது, தான் பெண் பார்க்க சென்றதையும், பெண் தனக்கு பிடிக்கவில்லை என கூறினாலும் என் அம்மா என்னை வற்புறுத்துகிறார் என கூறுகிறார். அதற்கு ஹரிகிருஷணன், அம்மா பேசி கேள் என அட்வைஸ் செய்கிறார். அம்மாவுக்கு அனைத்தும்தெரியும்,
அதற்கு ஊழியர், பெண்ணை பார்த்தவுடன் அம்மாவுக்கு எப்படி தெரியும் என அவன் கேட்க, 'எந்திரன் படத்தில் சிட்டி ஒரு புத்தகத்தை ஒரு நொடியில் ஸ்கேன் செய்வது போல காட்டுவதை நம்புகிறாய். ஆனால் இதை நம்ப முடியாதுல என கேட்கிறார் ஹரிகிருஷ்ணன். இதனை கேட்டு ஊழியர் உடனடியாக அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
இதற்கிடையே நண்பனின் அறையில் அடிபட்டு கிடக்கும் அருணை பார்க்க திவ்யா பழங்களை வாங்கிக்கொண்டு வருகிறார். அப்போது அருண் திவ்யாவிடம் தனியாக பேச தொடங்கும்போது அங்கு வரும் அருணின் அக்கா பவித்ரா திவ்யாவை அங்கு பார்த்து அவர் சர்ப்ரைஸ் ஆகிறார். அதன் பின் பேசிவிட்டு திவ்யாவை உடன் அழைத்து சென்றுவிடுகிறார்
இதனையடுத்து ஹரியின் மேனேஜர் மேடிக்கு அவரது குழந்தைக்கு உடல்நிலை சீரியில்லை, என போன்வர உடனே போக வேண்டும் என சொல்கிறார். அப்போது முழு விவரத்தையும் கேட்டறியும் ஹரி கிருஷ்ணனிடம், தனது அக்கா குழந்தையின் நிலை பற்றி கூறுகிறார். இதனால் ஹரியும் அவருடன் சேர்ந்து மருத்துவமனைக்கு செல்கிறார். குழந்தைக்கு தற்போது கண்டிப்பாக சர்ஜரி செய்து தலையில் இருக்கும் கட்டியை எடுக்க வேண்டும் என டாக்டர் கூறுகிறார்.
ஆனால் பணம் இல்லாததால் தான் அப்போதே செய்யவில்லை என கூறுகிறார் மேடி. தற்போது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்பதால் 25 லட்சம் ருபாய் பணத்தை தயார் செய்யுங்கள் என சொல்லிவிட்டு போகிறார் மருத்துவர் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil