Advertisment

வயிற்றில் கர்ப்பம்... கையில் பை... கண்ணம்மா பாணியில் ஊர் ஊராக கிளம்பிய இன்னொரு சீரியல்!

Tamil Serial Update : அபி தற்போது தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவர்களுக்கு இடையூராக இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

author-image
WebDesk
New Update
வயிற்றில் கர்ப்பம்... கையில் பை... கண்ணம்மா பாணியில் ஊர் ஊராக கிளம்பிய இன்னொரு சீரியல்!

Tamil Serial Rettai Roja Update In Tamil : கண்ணம்மா மட்டுமல்ல அபி ஆகிய நானும் இப்படிதான் என்று நிரூப்பிப்பது போல ஜீ தமிழின் இரட்டை ரோஜா சீரியலில் நாயகி அபி தனது நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.

Advertisment

சின்னத்திரை ஆனாலும் வெள்ளித்திரை ஆனாலும், கதை பிடிக்கவில்லை என்றால் அதை ரசிகர்கள் கலாய்ப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது திரையுலகில் கதைக்கு கடுமையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். கதை மட்டுமல்ல அதற்காக டைட்டிலுக்கும் பெரும் பஞ்சம் தான். இதனால் தான் ஏறக்குறைய அனைத்து சீரியல்களும் ஒரே கான்சப்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் சீரியலின் டைட்டில் கூட அந்த கதைக்கு தொடர்பே இல்லை என்றாலும், ஹிட்டான படங்களின் டைட்டிலை சீரியலுக்கு பயன்படுத்தி வருகினறனர். டைட்டிலை படங்களில் இருந்து எடுத்துக்கொண்ட சீரியல்கள், கதைக்கு சக சீரியலையே காப்பியடிக்கும் நிலையில் உள்ளது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் சீரியல் ஒன்று மற்ற சீரியலின் காப்பி காட் காட்சிக்காக ரசிகர்கள் மத்தியில் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

ஜீ தமிழின் ப்ரைம் டைம் சீரியல் ரெட்டை ரோஜா. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாந்தினி தமிழரசன், மற்றும் அக்ஷை கமல் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சீரியல் நாயகி அபி தற்போது தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவர்களுக்கு இடையூராக இருக்க வேண்டாம் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

கர்ப்பமாக இருக்கும் இவர் கையில் பேக்குடன் ஒவ்வொரு இடமாக வேலை வேண்டு ஏறி இறங்கும் கட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது பாரதி கணணம்மாவின் 2-ம் பாகம் என்று கலாய்த்து வருகினறனர். விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரின் சந்தேகத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் கர்ப்பிணி கண்ணம்மா வேலை தேடி பல இடங்களில் அலைந்துகொண்டிருப்பார்.

இந்த எபிசோடுகளே கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது பாரதியின் குடும்பத்தினர் கண்ணம்மாவை தேடி ஒருபுறம் அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு அருகில்தான் கண்ணம்மா இருப்பார் ஆனால் அவர்களுக்கு அது தெரியாது. அதுவரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு மட்டுமே வரவேற்பை பெற்று வந்த பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா நடைபயணத்தை தொடங்கி பின்பு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் வந்தது.

அதே அஸ்திரத்தை தற்போது ரெட்டை ரோஜா சீரியல் கையில் எடுத்துள்ளது. கணவரின் 2-வது திருமணத்தை தாங்கிக்கொள்ளாத அபி தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவர் நடைபயணம் செல்லும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா போல் அபியையும் அவரது குடும்பத்தினர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் கண்களில் அபி படவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாரதி கண்ணம்மா ரெடி என்று கூறி வருகினறனர்.

ஏற்கனவே அபி கார்ப்பமாக இருக்கும் காட்சிகள் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வருவது தொடர்பாக நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், தற்போது பாரதி கண்ணம்மாவின் பாணியை கடைபிடிப்பது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. படங்களில் தான் காப்பி கட் அதிகமாக இருக்கிறது என்றால், எல்லா சீரியலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் கட்சிகளையாவது மாற்றுவார்கள் என்றால் அதுவும் முடியாதா என்று கேட்டு வருகின்றனர்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathi Kannamma Serial Zee Tamil Vijaytv Serial Rettai Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment