ரகுநாத் மேத்தாவின் பலவீனங்களை தெரிந்துகொண்ட ஆதி அவனை ஏமாற்றுவதற்காக சொர்ணபுரி வைரத்தை கொண்டு அவரிடமிருந்து பத்து கோடி ரூபாயை வாங்க போகிறோம் என ஒரு திட்டத்தை கூறுகிறான். ஆனால் மேத்தாவின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர், மேத்தாவுக்கு வைரங்கள் பற்றி நன்றாகத் தெரியும். போலியான வைரத்தை கொடுத்து அவரை ஏமாற்றுவது சாத்தியமில்லை என கூறுகிறார்.
அதற்கு ஆதி நான் பொய்யான வைரத்தை காட்டப்போவதில்லை. ஆதிக்கடவூர் பரம்பரையின் நெக்லஸ் ஒன்றை வைத்துத் தான் இதை செய்யப்போகிறேன் என்று சொல்ல பார்வதியும் அதற்கு ஒப்புக் கொள்கிறாள். இதனைத் தொடர்ந்து அருணுக்கு போன் செய்யும் ஆதி தான் போட்டு வைத்து உள்ள திட்டம் அனைத்தையும் கூறி, வீட்டில் அம்மா அறையில் இருக்கும் சொர்ணபுரி வைர நெக்லஸை எடுத்துக்கொண்டு பெங்களூர் வரும் படி கூறுகிறார்.
ஆதி சொன்னது போலவே அருணும் ஐஸ்வர்யாவும் அகிலா அறையிலிருந்து வைர நெக்லஸை எடுத்துக் கொண்டு விமானத்தில் பெங்களூர் வந்து சேர்கிறார்கள். இதனையடுத்து ரகுநாத் மேத்தாவை ஏமாற்றுவதற்காக அவரது கண்ணில் மட்டும் படும் வகையில் ஒரு விளம்பரத்தை நியூஸ் பேப்பரில் ஒட்டி அவரது அலுவலகத்தில் வைத்து விடலாம் என ஆதி கூறுகிறான்.
இதற்கு மேத்தா அலுவலகத்தில் பணியாற்றும் நபரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவர் அந்த நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்று ரகுநாத் மேத்தாவின் அறையில் டேபிள் மீது வைத்து விடுகிறான். அந்த நேரத்தில் சரியாக மேத்தா ஆபீஸ் வந்து சேர்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil