Advertisment

வேண்டாத மருமகளா இருந்தாலும் பாராட்டும்போது... ஆஹா...!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial news, Sun TV Roja Serial, Roja Arjun,

Sun TV Roja Serial, Roja Arjun, tamil serial, தமிழ் சீரியல்

Tamil Serial News: சன் டிவி-யின் ரோஜா சீரியலில் நடிகை வடிவுக்கரசி அன்னபூரணி பாட்டியா நடிச்சு இருக்காங்க. மருமகளே என்று இவங்க தனது மருமகளை கூப்பிடறதும், என் மருமக கறந்த பால் மாதிரி குணம் உள்ளவ என்று பாராட்டுவதும், அருமையாக இருக்கிறது. அது மாதிரி அத்தை அத்தை என்று மாமியாருக்கு மரியாதை கொடுத்து பணிவாக நடந்துக்கறதுன்னு மருமகள் கல்பனா கேரக்டரும் பாராட்டும்படி நன்றாக இருக்கிறது. ஆனால், பேரன் அர்ஜுன் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜாவை கல்யாணம் செய்துக்கொண்டு வந்துவிட்ட நிலையில் தான், ரோஜாவை பிடிக்காம போகுது அன்ன பூரணி அம்மாவுக்கு.

Advertisment

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. வீடியோ வெளியீடு!

தனது பேத்தி அனு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து இருக்க வேண்டும் என்று இன்னும் நினைச்சு, ரோஜாவை ஏத்துக்க முடியலை அவங்களுக்கு. எல்லாரும் கிரெடிட் கார்டு தேவைக்கு அதிகமா வச்சுக்கிட்டு, இருப்பதை கட்டுப்படுத்தணும் என்று ரோஜா நடு ஹாலில் நின்று, அனைவருக்கும் கிரெடிட் கார்டு எந்த அளவுக்கு முக்கியம், இத்தனை வேண்டாம் என்று சொல்லி, வேண்டாததை வாங்கிக் கொள்கிறாள். சூட்டோடு சூடாக இதெல்லாம் பாட்டிதான் எனக்கு சொல்லிக் குடுத்தாங்க என்று சொல்லிவிடுகிறாள். அப்புறம் என்ன.. அன்ன பூரணி அம்மாவை குடும்பத்தினர் எல்லாரும் ஒரு ஆடிட்டர் ரேஞ்சுக்கு இந்த காரியத்தை யோசிச்சு செய்து இருக்கீங்க என்று புகழ, புகழ்ச்சி பிடித்துப் போனது அன்ன பூரணி பாட்டிக்கு.

‘இதற்கு காரணம் என் கணவர் தான்’: ஆச்சர்யமூட்டும் சமந்தா!

புகழ்ச்சி தானே. கேட்க கேட்க.. எனக்கும் பிடிச்சு இருந்தது. சரி போ கிடக்கட்டும்னு விட்டுட்டேன்னு அன்ன பூரணி அம்மா, ரஜினி ஸ்டைலில் நடித்து கூற, மகள் யசோதா போம்மா நீ என் கார்டு போச்சுன்னு கோச்சுக்கிட்டு போயிடறா. அப்போது தான் அர்ஜுன் வீட்டுக்கு கடன் வசூலிக்க வந்த வங்கி பணியாளர்களிடம், ஒரு பொம்பளை கடன் வாங்கினாள்னு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வச்சுருவோம்னு மிரட்டறீங்க, ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் கடனை வாங்கிகிட்டு வெளிநாட்டு போனால் விட்டுடறீங்க. ஏழை விவசாயியை மிரட்டறீங்க என்று பேச, சார் உங்களுக்கு எதாவது கடன் வேணுமான்னு கேட்கறாங்க வங்கி அதிகாரிகள்ன்னு சொல்றார். ம்ம்ம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வேண்டும். பாஸ்போர்ட் ரெடியா இருக்குன்னு சொல்ல, வங்கி அதிகாரிகள் ஓட்டம் பிடித்து விட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment