Advertisment

Sembaruthi Serial : ஆதியை வெளியே தள்ளிய மேத்தா... பண மோசடியில் வெளியான உண்மை

Sembaruthi Serial : ஜீ தமிழின் செம்பருத்தி சீிரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Sembaruthi Serial : ஆதியை வெளியே தள்ளிய மேத்தா... பண மோசடியில் வெளியான உண்மை

பணமோசடி செய்தது ரகுநாத் மேத்தா என்ற நபர் தான் என்ற உண்மை தெரிந்து ஆதியும் பார்வதியும், அவரது அலுவலகம் இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு  செல்கின்றனர்.ஆனால் அவர்களிடம் அப்பாயிண்ட்மென்ட் இல்லாததால், அவர்கள் இருவரையும் அங்கு காத்திருக்க வைத்துள்ளனர். இவர்கள் காத்திருப்பதை, மேத்தா சிசிடிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment

பல மணி நேரம் காத்திருந்தும் மேத்தாவை பார்க்க அழைக்கவில்லை என்பதால் கோபமாகும், பார்வதி ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் கேட்கிறார். ஆனால் ஆதி அவரை அமைதியாக இருக்கும்படி கூறுகிறான். ஆனால் பார்வதி கத்திய பிறகு ரிஷப்சனில் உள்ள அந்த பெண் மேத்தாவுக்கு போன் செய்ய அதன் பிறகு மேத்தா, அவர்களை அவர்களை உள்ளே அழைக்கிறார்.

அப்போது உள்ளே செல்லும் ஆதி மேத்தாவிடம் ஆதிக்கடவூர் டிரஸ்ட் பற்றியும், அந்த மோசடியை செய்தது நீங்கள் தானே என்றும் கேட்கிறாள். இதை கேட்ட அவர், ஆரம்பத்தில் கோபப்படுவது போல பேசிவிட்டு, ஆமாம் நான் தான் செய்தேன், அகிலாவின் பெயரை கெடுப்பதற்கு தான் இப்படி செய்தேன் என கூறுகிறார். இதனால் கோபமான ஆதி அவரை அடிக்க போகிறார்.

ஆனால் அதற்குள் மேத்தாவின் ஆட்கள் ஆதியை பிடித்து வெளியில் தள்ளுகிறார்கள். அதன் பின் வில்லி நந்தினிக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார் மேத்தா. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sembaruthi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment