Advertisment

இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்த ’The Elephant Whisperers’ ஆவணக் குறும்படம் : ஆஸ்கர் விருது வென்று சாதனை

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “The Elephant Whisperers’ திரைப்படம் வென்றுள்ளது.

author-image
WebDesk
New Update
இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்த ’The Elephant Whisperers’ ஆவணக் குறும்படம் : ஆஸ்கர் விருது வென்று சாதனை

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “The Elephant Whisperers’ திரைப்படம் வென்றுள்ளது.

Advertisment

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “The Elephant Whisperers’ திரைப்படம் வென்றுள்ளது

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து இந்த ஆவணப்படும் பேசுகிறது. இந்த படத்தை இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கி உள்ளார். .  தயாரிப்பாளர் குனீத் மோங்கா இப்படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படம் முதுமலை தேசிய பூங்காவில், உள்ள ரகு  என்ற யானையை  பொம்மன்  மற்றும் பெல்லி என்ற தம்பதி எப்படி பார்த்துக்கொள்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்தி உள்ளது.

இந்த குறும்படம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த படம் பார்க்கும் அனைவரையும் அது  உணர்வுபூர்வமாக பாதித்துவிடும். இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது, இந்திய சினிமா அடுத்த தரத்திற்கு சென்றுள்ளதை காட்டுகிறது என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment