Advertisment

பயங்கர சப்தத்துடன் வெடித்த குண்டு; தென்காசியில் பாதியில் நிறுத்தப்பட்ட தனுஷ் படப் பிடிப்பு

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
The shooting of Dhanush's Captain Miller has been halted in Tenkasi

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் செல்லும் பகுதியில் படமாக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் இன்று (ஏப்.25) குண்டு வெடிப்பது போல் போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்படும்போது பயங்கர சப்தம் கேட்டது.

Advertisment

இதையடுத்து அப்பகுதிவாசிகள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படப் பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது.

நிலத்தின் உரிமையாளர் அனுமதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் ராணுவ வாகானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த 15 நாள்கள் தடையும் விதிக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் புதிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்தப் படப்பிடிப்பும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மதுரையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment