Advertisment

’திருமணம்’: ஒருவழியா சந்தோஷும் ஜனனியும் சேர்ந்துட்டாங்க, ஆனா இன்னொரு ட்விஸ்ட் இருக்கே...

”ஜனனியும் - சந்தோஷும் சேர்ந்துட்டா இனி இதுல இண்ட்ரெஸ்டிங்கா ஒண்ணும் இருக்காதே” என்று நமக்குத் தோன்றும். ஆனால் இன்னொரு ட்விஸ்டும் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumanam serial, santhosh janani

Thirumanam serial, santhosh janani

Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘திருமணம்’ அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது. காதலித்த சக்தியை விட்டு விட்டு, காலச் சூழ்நிலையால் ஜனனியை திருமணம் செய்துக் கொள்கிறான் சந்தோஷ். இருப்பினும் தன்னால் சக்தியை மறக்க முடியாமலும், ஜனனியை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிக்கிறான்.

Advertisment

அதனால் ஜனனியை விவாகரத்து செய்து விட்டு சக்தியை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறான். சந்தோஷ் மீது அளவுக் கடந்த பாசம் கொண்டிருக்கும் ஜனனியோ அவனது சந்தோஷமே தனது சந்தோஷம் என நினைக்கிறாள். ஆனால், நாட்கள் செல்ல சந்தோஷுக்கு ஜனனியை பிடித்துப் போகிறது. அதனால், இனி அவளுடனே வாழ்ந்து விடலாம் என்ற மனநிலைக்கு வரும் போது, மலேசியாவிலிருந்து சக்தி வந்திறங்குகிறாள். சந்தோஷின் அண்ணி மாயாவுடன் சேர்ந்து, ஜனனியையும், சந்தோஷையும் வாட்டி வதைக்கிறாள் சக்தி.

ஒரு கட்டத்தில் நிலைமையைப் புரிந்துக் கொண்டு, சந்தோஷை ஜனனியிடமே விட்டுத் தர முடிவெடுக்கிறாள். அப்போது ஜனனிக்கும், சந்தோஷுக்கும் முதலாமாண்டு திருமணநாள் வருகிறது. ஆனால், இந்த ஒரு வருடத்தில் அவர்கள் ஒருநாள் கூட கணவன் - மனைவியாக வாழவில்லை. ஆகையால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்த விதத்திலும் குறுக்கிட மாட்டேன், புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள் என்று, சந்தோஷிடம் தானே தாலி எடுத்துக் கொடுத்து மீண்டும் ஜனனி கழுத்தில் கட்ட வைக்கிறாள். ”என்னடா ஜனனியும் - சந்தோஷும் சேர்ந்துட்டா இனி இதுல இண்ட்ரெஸ்டிங்கா ஒண்ணும் இருக்காதே” என்று நமக்குத் தோன்றும். ஆனால் இன்னொரு ட்விஸ்டும் இருக்கிறது.

அதாவது சந்தோஷின் அண்ணன், அதாவது (வில்லி) மாயாவின் கணவன் வீடு திரும்புகிறார். ஓராண்டுக்கும் மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இப்போது தான் அவரின் காட்சிகள் வருகின்றன. “எதோ ஒரு வேகத்துல வீட்ட விட்டு போய்ட்டேன் ப்பா. ஆரம்பத்துல சிங்கப்பூர்ல வேலை செஞ்சு சம்பாதிச்சேன். அந்த பணத்தை ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஓட்டல் பிஸினஸ் ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்ல அது நஷ்டமாகிடுச்சு. காரணமான ஃப்ரெண்ட் வேற நாட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டான். அதுனால என்ன போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்க. இப்போ தான் வர்றேன். நீங்க யாரும் என்ன ஏத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சு தான் உங்க யார் கிட்டயும் ஹெல்ப் கூட கேக்கல. இனி நீங்களே என்ன கழுத்த பிடிச்சு வெளில தள்ளினாலும், நா இந்த வீட்ட விட்டு போக மாட்டேன்” என்கிறார்.

சந்தோஷின் அண்ணன் திரும்பி வந்தது, வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அவரின் மனைவியோ செய்வது அறியாமல் தேம்பி தேம்பி அழுகிறாள். காரணம் சொத்துக்களை கைப்பற்ற பல திட்டங்களைப் போட்டு வைத்திருக்கும் மாயாவுக்கு தடையாக வந்து விட்டார் அவளது கணவர். ஆக இனி திருமணம் சீரியலின் கதை மாயா Vs அவளது கணவன் என்றிருக்கும் எனத் தெரிகிறது.

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment