சக்தியை காதலித்த சீரியலின் ஹீரோ சந்தோஷ், ஹீரோயின் ஜனனியை திருமணம் செய்துக் கொள்கிறான். இருப்பினும் சக்தியை அவனால் மறக்க முடியாமல், இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். இதற்கிடையே மலேசியாவிலிருந்து சக்தி வந்தாள், சந்தோஷை அடைய மாயாவுடன் இணைந்து பல திட்டங்கள் போட்டு, பின் ஜனனியிடமே அவனை விட்டுக் கொடுத்தாள். அதற்கு முன்பு சந்தோஷ் காணாமல் போக, அவனை தேடி அலைந்தால் ஜனனி.
பின்னர் ஜனனியின் தங்கை அனிதாவுக்கு, அவளது அத்தை மகன் ஆனந்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அனிதாவும் சந்தோஷின் தம்பி நவீனும் ஏற்கனவே காதலில் இருந்தார்கள். அப்பா வாக்குக் கொடுத்துவிட்டார், அதை மீறி எதையும் செய்ய முடியாது என்பதால், அனிதா ஆனந்தை திருமணம் செய்துக் கொள்வது தான் சரி என்பது ஜனனியின் வாதம். மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்தால் தானே அவர்கள் நன்றாக இருப்பார்கள் அதனால் நவீன் - அனிதா இணைய வேண்டும் என்பது சந்தோஷின் நிலைப்பாடு. இதற்கிடையே அனிதா திருமணத்தின் போது, மர்ம நபர்கள் நவீனை கடத்த, அவனைத் தேடி அனிதா செல்ல.... இது பெரும் பிரச்னையாகி அந்தத் திருமணம் நின்றது.
இவர்களை இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக அனிதாவுக்கும், நவீனுக்கும் தானே முன்னின்று கல்யாணம் செய்து வைத்தான் சந்தோஷ். தான் இவ்வளவு சொல்லியும், இப்படி செய்து விட்டாரே என்று எண்ணிய ஜனனி, யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தங்கை காணாமல் போனதுக்கு சந்தோஷ் தான் காரணம் என்று ஜனனியின் அண்ணன் அவன் மீது போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.
இதற்கிடையே ஜனனியை தேடி அலையும் சந்தோஷ், ஒரு வழியாக அவளை கண்டுப்பிடித்து விடுகிறான். சந்தோஷுடன் வீட்டுக்கு திரும்புவாளா ஜனனி? பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news