Advertisment

Thunivu movie review: ரசிகர்களை கவர்ந்தாரா எச்.வினோத் ’டார்க் டெவில்ஸ்’?

எச்.வினோத்துக்கு இது தெரியும், அதனால்தான், “மக்கள் எப்போதும் அவர்களை மகிழ்விப்பவர்களைத்தான் விரும்புகிறார்கள், தொடர்ந்து மெசேஜ் வழங்குபவர்களை அல்ல” என்று படத்தில் ஏதோ ஒரு வசனம் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Thunivu movie review

அஜித் குமார் நடிப்பில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் துணிவு.

அஜித்தின் 2011 பிளாக்பஸ்டர் திரைப்படமான மங்காத்தாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று, அதன் ஆண்டி ஹீரோ ஃபார்முலா. ஒருவழியாக, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் இருந்தார், அவர் தனது கதாநாயகனின் அக்கிரமத்தை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை.  ஆனால், இயக்குனர் எச் வினோத்தின் தார்மீக திசைகாட்டி, விஷயங்களின் சரியான பக்கத்தை நோக்கிச் செல்கிறது.

Advertisment

துணிவு ஹீரோ, டார்க் டெவில் என்று குறிப்பிடப்படுகிறார், இந்தப் படம் முதல் சில நிமிடங்களுக்கு, மங்காத்தாவில் அஜித் எடுத்த டபுள் கிராஸிங் வித்தையைப் போலவே இருப்பதால், அது ஒரு பிரச்சனை.

துணிவு படத்தின் முதல் பிரேமிலிருந்தே, வினோத் கதையை அமைக்கத் தொடங்குகிறார், ஏனெனில் அவரிடம் சொல்ல கொஞ்சம் சிக்கலான ஒன்று உள்ளது. ஒரு கும்பல், ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன், ஒரு வங்கியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொகையை திருட திட்டமிடுகிறது.

அந்தத் திட்டத்தை ஹைஜக் செய்யும் டார்க் டெவில்ஸ் எண்ட்ரீ ஆகும் வரை அந்த நாளில் எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கும். இது ‘ஏன்’ என்பது படம் முழுவதும் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் வினோத் ஜெயிக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் ஏதோ ஒன்று நடப்பதால், துணிவு உங்களை பொறுமையிழக்கச் செய்யாது.

அதன் ஹீரோ மற்றும் கொள்ளையர்களைப் போலவே, படமும் மாஸ்க் அணிந்துள்ளது. ஒரு கட்டத்தில் துணிவு ஒரு திருட்டுப் படமாக (heist film) மாறுகிறது. திடீரென்று சதுரங்க வேட்டை படம் பார்ப்பது போல உணர்வு வருகிறது (வினோத்தின் அறிமுகப் படம்). ஊடகங்கள், காவல்துறை, அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் வினோத்தின் விமர்சனம் நகைச்சுவையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.

ஊழல் பத்திரிக்கையாளரின் குணாதிசயமும், ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியுடன் அவர் கையாளும் விதமும் வேடிக்கையாகவும் அதே நேரத்தில் கவலையாகவும் இருக்கிறது. படம் பகல் நேரத்தில் நடந்தாலும், அவை அனைத்தும் மிகவும் இருளாக தெரிகிறது.

சீனியர் பத்திரிக்கையாளரும், போலீஸ்காரரும் ஒரு கல்லூரிப் பெண்ணைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அவளைப் பற்றி என்ன சொன்னாலும் அது பிரச்சனைக்குரியதாக உள்ளது. அவர்கள் சர்வ சாதாரணமாக பேசும் தொனி தான் மிகவும் கவலைக்கிடமானது. ஆனால் அதுதான் படத்தின் நோக்கம்: நம் மூக்கின் கீழ் நடக்கும் உண்மையான குற்றங்களைக் காட்டுவது.

ஆயினும்கூட, சில சமயங்களில் திரைப்படத்தின் இந்த வர்ணனை அனைத்தும் உபதேசமாக மாறுவதற்கான சூழலில் வருகிறது.

முதல் பாதியின் ஸ்டைலும், மர்மமும் இடைவேளைக்குப் பிறகு சீக்கிரம் ரிவீல் ஆகிறது, படம் ஒன்றன் பின் ஒன்றாக சோகமான கதையைச் சொல்லத் தொடங்குகிறது, இது படத்தின் டார்க் இயல்புக்கு பொருந்தவில்லை.

ஹீரோவின் சில மோசமான நகைச்சுவைகளைப் பார்த்து ஒருவர் ஒரு கணம் சிரித்துவிட்டு மற்றொரு கணத்தில் துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக ரத்தம் சிந்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மேல், இந்த விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையில் ஒப்பந்தக் கொள்ளைக்காரனாக இருக்கும் கதாநாயகனிடம் இருந்து வருகிறது என்பதை நீங்கள் உணரும்போது பதட்டமாக இருக்கிறது.

டார்க் டெவிலின் பாத்திரம் சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் இல்லை. அவர் எங்கிருந்து வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது, அது அவரை முழுமையாக வேரூன்றச் செய்வதை கடினமாக்குகிறது.

மொத்தத்தில் துணிவு cold and dark ஆக இருக்கும் வரையிலும், அஜித் நடந்து, நடனமாடும், வெறிபிடித்தவர் போல் கத்தும் வரையிலும் ரசிக்க வைக்கிறது. அது நிதானமான தருணத்தில், அதன் பொல்லாத அழகை இழக்கிறது.

எச்.வினோத்துக்கு இது தெரியும், அதனால்தான், “மக்கள் எப்போதும் அவர்களை மகிழ்விப்பவர்களைத்தான் விரும்புகிறார்கள், தொடர்ந்து மெசேஜ் வழங்குபவர்களை அல்ல” என்று படத்தில் ஏதோ ஒரு வசனம் இருக்கிறது. ஒரு வேளை, அது திரைப்படங்களில் உண்மையாக இருக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment