Advertisment

வேற லெவல் விஜய் சேதுபதி: ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; எப்படி தெரியுமா?

social activist Veerarahavan said actor Vijay Sethupathi silently helped over a lakh people to secure employment Tamil News: நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைக்க சைலண்டாக உதவியிருப்பதாக சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi Tamil News: Vijay Sethupathi helped a lakh people secure employment via NGO

Vijay Sethupathi Tamil News: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், ரசிகராக இருந்தாலும் சாதாரணமானவராக இருந்தாலும் நெருக்கமாக பழகக்கூடிய எளிய மனிதர். பெரிய உச்சங்களை தொட்டபோதிலும் கர்வம் கொள்ளாத மாமனிதன். கண்முன்னே கஷ்டபவர்களுக்கு ஓடி சென்று உதவும் குணம் படைத்தவர். இப்படியாக அவரது நற்குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Advertisment
publive-image

விஜய்சேதுபதி

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைக்க சைலண்டாக உதவியிருப்பதாக சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார். பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலரான வீரராகவன், "வள்ளலார் வேலை வைப்பு சேவை இயக்கம்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளை இலவசமாக வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல நிறுவனங்களுக்கு பொருத்தமான பணியாளர்களைக் கண்டறியவும் உதவியுள்ளது.

முன்னதாக, மத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த வீரராகவன், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேர அடிப்படையில் மக்களுக்கு உதவத் தொடங்கினார். 2019ம் ஆண்டில் அவர் சுமார் 3,300 பேருக்கு வேலை கிடைக்க உதவினார். அவரது இந்த சேவை மனப்பான்மை, அவர் 'நம்ம ஊரு ஹீரோ’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கதன் மூலம் தெரிய வந்தது.

publive-image

விஜய்சேதுபதி

அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி, வீரராகவனின் இந்த புதிய முயற்சியை கண்டு வியந்து போனார். நிகழச்சி முடிந்த பின் அவரால் ஆனா உதவிகளை செய்து தருவதாகவும் விஜய் சேதுபதி உறுதி அளித்திருக்கிறார். அவரது வார்த்தைகளை நம்பி, வீரராகவன் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ததுடன் 'வள்ளலார் வேலை வைப்பு சேவை இயக்கம்' என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தை நடத்தி வரும் வீரராகவன் முதல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் நடிகர் விஜய்சேதுபதி தான் முழு பண உதவி செய்து வருவதாகவும், தற்போதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சமூக ஆர்வலர் வீரராகவன் தனியார் செய்தி இதழுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "விஜய் சேதுபதியின் உதவி சாதாரணமானது அல்ல. அவர் எனக்கும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்கி வந்தார். இதன் விளைவாக தான் ஊழியர்களைத் தேடும் இரண்டு நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் அடைந்தனர். மார்ச் 20, 2022 நிலவரப்படி. 1,00,133 படித்த இளைஞர்கள் எங்கள் சேவைகளால் பயனடைந்து தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

publive-image

தற்போது, நடிகர் விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தாவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', இயக்குநர் சீனு ராமசாமியின் 'மாமனிதன்', இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

நடிகர் விஜய் சேதுபதி இப்படி சைலண்டாக உதவியிருக்கும் செய்து வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil Vijay Sethupathi Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment