Aranmanai Kili Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான ஒன்று ‘அரண்மனை கிளி’ சீரியல்.
மாற்றுத் திறனாளியான அர்ஜூனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்த பெண், முகூர்த்தத்திற்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடிவிட, அவளின் தங்கை ஜானு, அர்ஜுனை திருமணம் செய்துக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. பிடிக்காத திருமணம் என்பதால் வீட்டாரின் அனுமதியுடன் விவாகரத்துக்கோரி வழக்குப் போட்டிருக்கிறார் அர்ஜூன். அர்ஜூனின் விருப்பமே தனது விருப்பம் என்றிருக்கிறார் ஜானு.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: வன்மம், குரோதம், பொறாமை இல்லாத ஒரு இயல்பான சீரியல்!
இதற்கிடையே அர்ஜூனின் முன்னாள் காதலி சுப்பு லட்சுமியைப் பற்றி தெரிந்துக் கொள்ள, அவ்வப்போது விஜயாவிடம் கதை கேட்பது, ஜானுவின் வழக்கம். விஜயாவும் சுவாரஸ்யமாக அர்ஜுனின் முன்னாள் காதலி பற்றி கதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.
கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ஏண்டி... உனக்கு கஷ்டமா இல்லை... உன் புருஷன் காதல் கதையையே இவ்ளோ இன்ட்ரெஸ்ட்டா கேட்குறியே... உன்னை பார்த்தா பாவமா இருக்குடீன்னு” விஜயா சொல்ல, ”கஷ்டமெல்லாம் ஒண்ணும் இல்லக்கா. அவருக்கு எது, என்னென்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க கேட்கறேன்” என பதிலளிக்கிறாள் ஜானு. அப்போது துர்கா வந்துவிட, ’அக்கா நான் ஸ்டவ்ல குக்கர் வச்சிருக்கேன்’ எனக் கூறியவாறு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் ஜானு. திரும்பிப் பார்த்த விஜயாவுக்கு விஷயம் புரிகிறது. “ஓ இதான் காரணமா” என மனதுக்குள் பேசிக் கொள்கிறாள்.
அப்போது, கோபத்துடன் ஆட்டோவில் வரும் சுப்பு லட்சுமி, அர்ஜுன் வீட்டு வாசலில் இறங்குகிறார். ’யாருங்க யாருங்க’ என வீட்டிலிருப்பவர்கள் கேட்க கேட்க, பதில் பேசாமல் உள்ளே சென்ற சுப்பு, கிச்சனுக்கு செல்கிறாள். அங்கிருந்த விஜயா, ”ஏய் சுப்பு லட்சுமி” என்று கூப்பிட, அதற்கும் பதில் பேசாமல் ஜானுவின் அருகில் சென்று, அவளது கழுத்தில் கிடக்கும் தாலியை எடுத்து பார்க்கிறாள்.
இப்படியாக அடுத்து வரும் சுவாரஸ்யத்திற்காக காத்திருக்கிறார்கள் சீரியல் ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.