விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய சீரியல் அரண்மனைக்கிளி. மனி’ ஆர்காஷ், சூர்யா தர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு கொரோனா லாக்டவுன் தடை போட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்ட்டதால், பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் அரண்மைக்கிளி சீரியலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நிறுத்தப்பட்ட சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பான போது அரண்மனைக்கிளி சீரியல் மட்டும் ஒளிபரப்பு செய்யவில்லை. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.
நன்றாக தானே ஓடியது ஏன் நிறுத்தினார்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், தற்போது அந்த கேள்விக்கு அரண்மனை கிளி சீரியல் நாயகன் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ள தர்ஷன், கொரோனா அரண்மனைக்கு வந்து கிளியை தாக்கிவிட்டது, நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு நடத்தவில்லை, எனவே சீரியல் நிறுத்தப்பட்டது.
இதனால் சீரியலை முடித்துவிட்டார்கள். அந்த சீரியல் எப்போது எனக்கு ஸ்பெஷல் தான், அர்ஜுன்-ஜானு கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள் என பதிவு செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil