Advertisment

Vijay TV Serial: மனைவி இருக்கும் போது துணைவியைத் தேடினால்… இப்படித்தான் அவஸ்தைப் படணும் கோபி!

கோபி துணைவி ராதிகாவுக்கு வாங்கிய புடவை மனைவி பாக்யாவிடம் சிக்கியதால் அதை உனக்குதான் வாங்கினேன் என்று கூறி சமாளிக்கிறான். ஆனால், ராதிகா புடவை கேட்டால் என்ன செய்வது என்று அதே போன்ற டிசைன் புடவையை வாங்கி கொடுக்கிறான்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: மனைவி இருக்கும் போது துணைவியைத் தேடினால்… இப்படித்தான் அவஸ்தைப் படணும் கோபி!

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில், மனைவி பாக்யா இருக்கும்போது துணைவியைத் தேடும் கோபி, ராதிகாவுக்கு வாங்கிய புடவை பாக்யாவிடம் சிக்கியதால் அதை உனக்குதான் வாங்கினேன் என்று கூறி சமாளிக்கிறான். ஆனால், ராதிகா புடவை கேட்டால் என்ன செய்வது என்று அதே போன்ற டிசைன் புடவையை அலைந்து தேடி கொடுக்கிறான்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யலட்சுமியாக கே.எஸ். சுசித்ரா ஷெட்டி நடிக்கிறார். பாக்யாவின் கணவர் கோபியாக சதிஷ் குமார் நடிக்கிறார். ரேஷ்மா பசுப்பலேட்டி ராதிகாவாக நடிக்கிறார். பாக்யா வீட்டு வேலைக்காரியாக கம்பம் மீனா நடிக்கிறார்.

பாக்கியலட்சுமி குடும்பமே உலகம் என்று இருகும் பொறுப்பான குடும்பத் தலைவி. பாக்யாவுகு அகிலன், எழிலன் என 2 மகன்கள். முதல் மகன் அகிலன் மனைவி ஜெனிஃபர். பாக்யா மகள் இனியா. மாமியார் மற்றும் மாமனார் என்று கூட்டுக்கு குடும்பமாக இருக்கிறார்கள். வளந்த பிள்ளைகளின் அம்மாவாக இருக்கும் பாக்யா படிக்காதவளாக இருந்தாலும் தனது சொந்த காலில் நிற்க வேண்டு என்று மசாலா பொருட்கள் தயார் செய்துகொடுப்பது. ஹோம் ஃபுட் டெலிவரி என்று முயற்சி செய்கிறார். பாக்யாவின் கணவர் கோபி, மனைவி படிக்காதவள் என்பதால் தான் கல்லூரி காலத்தில் காதலித்த ராதிகாவுடன் வாழ விரும்புகிறான். ராதிகா கணவணை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்கிறார்.

ஆனால், ராதிகாவும் பாக்யாவும் தோழிகளாகிறார்கள். இதனால், கோபி, ராதிகாவைப் பற்றி பாக்யாவுக்கு தெரியக் கூடாது என்றும் பாக்யாவுக்கு ராதிகாவைப் பற்றி தெரியக் கூடாது என்றும் மறைக்க முயற்சிக்கிறான்.

இந்த சூழலில்தான், கோபி, ராதிகாவுக்கு ஒரு புடவை வாங்கித்தர அது பாக்யாவின் கைகளில் சிக்கி விடுகிறது. ஏற்கெனவே, வேலைக்காரி செல்வி ஐயா ஒரு பொம்பளைக்கு புடவை வாங்கிக்கொடுத்ததைப் பார்த்தேன் என்று கூறியதால் சந்தேகத்தில் இருக்கும் பாக்யா, இந்த புடவையை யாருக்கு வாங்கினீர்கள் என்று கோபியிடம் கேட்கிறாள். வேறு வழியே இல்லை சமாளிக்க வேண்டும் என்பதால், கோபி அந்த புடவையை உனக்கு சர்பிரைஸாக கொடுக்க வைத்திருந்தேன் என்று கூறி அந்த புடவையை பாக்யாவிடமே கொடுத்து சமளிக்கிறான்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடும் பாக்யா அப்படியாங்க, என்று சந்தோஷத்துடன் கோபி வாங்கி கொடுத்த புடவையை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டுகிறாள்.

இந்த புடவையை தான் மறைச்சு எடுத்து வந்து சீன் போட்ட என ஈஸ்வரி கிண்டல் பண்ண, இது சாதாரண சேலை இல்லை என்று சந்தோஷமாக சொல்கிறாள். அதனால், இந்த புடவை யார் வாங்கி கொடுத்தது சொல்லுங்க என பாக்யா கேட்கும் போது, மகள் இனியா, நீயே சொல்லும்மா என்கிறாள். அதற்கு பாக்யா, இந்த புடவை இனியா அப்பா வாங்கி கொடுத்தது என சொல்கிறாள். இதைக்கேட்டு, குடும்பத்தினர் எல்லோருமே ஆச்சரியப்படுகிறார்கள்.

பாக்யாவிடம் இருந்து புடவையை வாங்கி பார்க்கும் மாமியார் ஈஸ்வரி புடவையின் விலை 11,600 ரூபாய் என்று இருந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறாள். அப்போது அங்கிருக்கும் எழில், இவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரே, எதையாவது பண்ணிட்டு அதை மறைக்க இந்த மாதிரி பண்ணி இருப்பாரோ என்று என்று மனதுக்குள் யோசிக்கிறான். அதன்பின்னர், செல்வி வீட்டிற்கு வருகிறாள். பாக்யா அவளிடம் கோபி வாங்கி கொடுத்த புடவையைக் காட்டி சந்தோஷப்படுகிறாள்.

அதோடு விடாமல், பாக்யா “நீ என்ன சொன்ன இல்ல, அவர் ஏதோ ஒரு பொண்ணு கூட இருந்தாருன்னு. இங்க பாரு எனக்காக வாங்கிட்டு வந்து இருக்காரு” என்று சொல்கிறாள். அவள் சொல்வதை கேட்டு, எனக்கு ஏதோ தப்பா தோணுது அக்கா என்று செல்வி சொல்கிறாள். சொல்கிறாள். ஆனால், அப்போதும் நம்பாத பாக்யா, “நான் அவர் எனக்கு முதல்முறையா புடவை வாங்கி கொடுத்த சந்தோஷத்துல இருக்கேன். அதை கெடுத்துடாத” என்று செல்வியை திட்டுகிறாள். இதற்கு இடையில், ராதிகா நீங்க வாங்கி கொடுத்த புடவையை உங்க காரிலேய் விட்டுவிட்டேன். அதை எடுத்துக்கொண்டு வாங்க என்று கூறியதால், கோபி அந்த புடவையை பாக்யாவுக்கு கொடுத்துவிட்டதால் அதே டிசைன் புடவையை எடுக்க கடைக்கு வருகிறான். அப்போது, துணிக்கடையில் சேல்ஸ் கேர்ள் புடவை போட்டோ கேட்கிறார்.

இதையடுத்து, கோபி புடவை டிசைன் போட்டோ வேண்டும் என்பதால் பாக்யாவிற்கு போன் பண்ணி போட்டோ கேட்கிறான். அதற்கு பாக்யா எதற்கு என்று கேள்வி கேட்கிறாள். அதற்கு கோபி, பாக்யாவிடம் “நேத்து வாங்கின புடவைக்கு பிளவுஸ் வாங்க மறந்துட்டேன். அதான் இன்னைக்கு வாங்கலாம்ன்னு கடைக்கு வந்துருக்கேன். சீக்கிரம் அனுப்பு பாக்யா” என்று பொய் சொல்கிறான். பாக்யாவும் நம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் புடவையின் போட்டோ எடுத்து அனுப்புகிறாள். ஆனால் சேல்ஸ் கேர்ள் அந்த கலர்ல ஒரு பீஸ் தான் இருந்தது என சொல்கிறார். ராதிகா புடவை கேட்டாள் என்ன செய்வது என்று கோபி முழிக்கும்போது, சேல்ஸ் கேர்ள் அதே மாதிரி மாடலில் வேற கலரில் புடவை எடுத்து கொடுக்கிறார்.

ராதிகாவை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று கோபியும் வேற வழி இல்லாமல் அந்த புடவையை வாங்கி கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறான். அவன் கொண்டு வரும் புடவையை பிரித்து பார்க்கும் ராதிகா, இது நேத்து நம்ம வாங்குனது இல்லையே என சொல்கிறாள்.

அதற்கு, கோபி, இந்த புடவைதான் கார்ல இருந்தது. நீ வாங்கினது என சொல்கிறான். அப்போது ராதிகா, இல்லை கோபி. அந்த புடவை வேற மாதிரி இருந்தது என்கிறாள். நீ வாங்கின புடவைதான் என்று ராதிகாவை நம்பவைப்பது என்று கோபி யோசிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. அன்பான குணமான மனைவி இருக்கும்போது துணைவியைத் தேடினால் இப்படித்தான் மாட்டிக்குவோமோ என்ற பயத்தில் கோபி மாதிரி பொய் சொல்லி அவஸ்தைப்படணும் என்று பாக்கியலட்சுமி சீரியலின் ஒவ்வொரு எபிசோடு சொல்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment