Advertisment

Vijay TV Serial; லட்சுமிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்… கண்ணம்மாவிடம் கேட்கும் பாரதி

Vijay TV barathikannamma serial today episode barathi interrogates kannamma: பாரதியை எப்படி சமாளிப்பது என யோசிக்கும் சௌந்தர்யா, லட்சுமியோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் அவள யார் கூடவும் அனுப்ப முடியாது என உறுதியாக சொல்லும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; லட்சுமிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்… கண்ணம்மாவிடம் கேட்கும் பாரதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மாவுக்கு போன் செய்து எல்லா உண்மையையும் சொல்லிடு சௌந்தர்யாவிடம் வேணு சொல்ல, கண்ணம்மாவுக்கு போன் செய்கிறாள். கண்ணம்மா, லட்சுமி அங்க இருக்காளா என கேட்க, சௌந்தர்யா ஆமாம் என்கிறாள், உடனே அங்கே வருவதாக சொல்கிறாள் கண்ணம்மா. பாரதிக்கு உண்மை தெரிஞ்சுருச்சா, லட்சுமிய எதுவும் பேசுனாரா என கேட்க, இல்லை நீ வா நேர்ல பேசிக்கலாம் என்று சௌந்தர்யா வரச் சொல்கிறாள்.

அடுத்து, கண்ணம்மாவின் அப்பா, சௌந்தர்யாவிடம் வந்து, லட்சுமி கண்ணம்மாவோட மகளா என கேட்க, ஆமாம் என்கிறாள். இதைக்கேட்டு சந்தோசப்படும் அவர், பாரதிக்கு இது தெரியுமா என கேட்க, இல்லை, ஆனா பாரதிக்கு இப்ப சந்தேகம் வந்துடுச்சு என்று சொல்கிறார் வேணு. பின்னர் பாரதியிடம் எதுவும் யாரும் சொல்லாதீங்க என்று சொல்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு வரும் கண்ணம்மா, அவளின் அப்பா இங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். அப்போது சௌந்தர்யா, பாரதிக்கு இன்னும் முழுசா உண்மை தெரியாது, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, என கண்ணம்மாவின் அப்பாவை சமாதானப்படுத்துகிறாள். மேலும், ஹேமா போலவே, லட்சுமி மேல அவ்வளவு பாசம் வச்சுருக்கான், எதுவும் தப்பா நடக்காது என ஆறுதல் சொல்கிறாள். இதை கீழே நின்று கேட்கும் கண்ணம்மா பாரதி இன்னும் எதுவும் தெரியாது என ஆறுதலடைகிறாள்.

publive-image

அடுத்து, கண்ணம்மாவை பார்த்ததும், நீ எப்ப வந்த என அவளது அப்பா கேட்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தேன், வெளியில் நின்னுக்கிட்டு இருந்தேன் என சொல்கிறாள். நீ ஏன் வெளியில் நின்ன என அவளது அப்பா கேட்க, வெளி ஆளுங்க வெளியில் தானே நிப்பாங்க என அதிரடியாக எண்ட்ரியாகிறான் பாரதி. பின்னர் திறந்த வீட்ல எதோ நுழைஞ்ச மாதிரி உள்ளே வரக்கூடாது, நீங்களும் வந்த வேலைய பார்த்துட்டு கிளம்புங்க என்று சொல்கிறான். உடனே சௌந்தர்யா, அவர் அகிலோட மாமனார் என பாரதியை கண்டிக்கிறாள்.

பின்னர் பாரதி, கண்ணம்மா எதுக்கு இங்க வந்திருக்கா என கேட்கிறான். எல்லோரும் அதிர்ச்சியாக, லட்சுமியை கூட்டிட்டு போக வந்தேன் என கண்ணம்மா சொல்ல, லட்சுமிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறான் பாரதி. எல்லோரும் எதுவும் பேச முடியாமல் நிற்கின்றனர்.

அடுத்து, கண்விழிக்கும் லட்சுமி, டாக்டர் அங்கிள் என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டாரா, அம்மா தேடுவாங்களே என பதறியவாறு, கீழே வருகிறாள். இங்கு பாரதி, லட்சுமிக்கும் உனக்கும் என்ன உறவுனு சொல்லு என மீண்டும் கேட்கிறான். உடனே சௌந்தர்யா, நீ ஹேமாவ கண்ணம்மா வீட்டில் விட்ட மாதிரி, லட்சுமியோட அம்மா அப்பா, கண்ணம்மா வீட்டில் விட்டுருக்காங்க என சமாதானப்படுத்துகிறாள். ஆனால், பாரதி, அப்ப லட்சுமிக்கும் கண்ணம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அப்படி தானே, என கேட்க, ஆமா என்று சொல்கிறாள் சௌந்தர்யா. பின்னர் பாரதி, லட்சுமியோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் நான் பார்த்துக்கிறேன் என சொல்லி அதிர்ச்சியளிக்கிறான்.

publive-image

அடுத்து வேணு, கண்ணம்மா கூட அனுப்பு என சொல்ல, லட்சுமியோட அம்மா அப்பா வர்ற வரைக்கும் அனுப்ப மாட்டேன் என்று சொல்கிறான் பாரதி. பின்னர், கண்ணம்மா எதுக்கு இங்க வந்திருக்கா என கேட்க, லட்சுமியை பார்க்க வந்தேன் என கண்ணம்மா சொல்ல, அவ நல்லா இருக்கா, லட்சுமியோட அம்மா எப்ப வருவாங்க என கேட்கிறான் பாரதி. தெரியலை என கண்ணம்மா சொல்ல, அவங்க வர்ற வரைக்கும் லட்சுமி என்கூட தான் இருப்பா என்று சொல்கிறான் பாரதி. உடனே கண்ணம்மா, லட்சுமியோட அப்பா அம்மா, என்னை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க, ஹேமாவ பத்திரமா பார்த்துக்க முடியாதா இவருக்கு எதுக்கு சிரமம், என் கூட அனுப்புங்க என சொல்கிறாள். மேலும், அகில் கடைசியா என்ன சொல்ற என கேட்க, லட்சுமியோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் அவள யார் கூடவும் அனுப்ப முடியாது என உறுதியாக சொல்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment