Advertisment

Vijay TV Serial; கண்ணம்மாவை காதலுடன் பார்க்கும் பாரதி… மகிழ்ச்சியில் சௌந்தர்யா

Vijay TV barathikannamma serial today episode barathi sweet gesture: பூச்செடிகளுடன் கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி, இருவருக்குள்ளும் மீண்டும் எட்டிப் பார்க்கும் காதல், இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மாவை காதலுடன் பார்க்கும் பாரதி… மகிழ்ச்சியில் சௌந்தர்யா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

பூச்செடிகள் வாங்கும் பாரதியிடம், இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என சௌந்தர்யா கேட்க, அதிர்ச்சியாகிறான் பாரதி. பின்னர் கார் ரிப்பேர் என சமாளிக்க, நான் கொண்டு போய் விடுறேன் என அழைக்கிறாள் சௌந்தர்யா. காரில் போகும்போது எங்க போகனும் என சௌந்தர்யா கேட்க, ஃப்ரண்ட் வீட்டுக்கு என சமாளிக்கிறான். அந்த ஃபிரண்ட வீட்டுக்கு கூட்டிட்டு வா என சௌந்தர்யா சொல்ல, சரி என சொல்லி, நா இங்கே இறங்கிக்கிறேன் என பாரதி காரிலிருந்து இறங்குகிறான்.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மா வீட்டில் லட்சுமியும் ஹேமாவும் டங் ட்விஸ்டர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் தூக்கம் வருகிறது, லட்சுமி தூங்க செல்கிறாள். கண்ணம்மா வீட்டுக்கு ஆட்டோவில் வருகிறான் பாரதி. பாரதியை பின் தொடர்ந்து வருகிறாள் சௌந்தர்யா. பூச்செடிகளுடன் பாரதியை பார்த்த ஹேமாவும் கண்ணம்மாவும் ஆச்சரியப்படுகிறார்கள். ஹேமா பூச்செடி எதுக்கு என கேட்க, சும்மா வாங்கிட்டு வந்தேன் என சமாளிக்கிறான். அதன்பின் ஹேமா பூச்செடியை இப்பவே வைக்கலாம் என கண்ணம்மாவை அழைக்கிறாள். பூச்செடிகள் வைக்கும்போது அடிக்கடி கண்ணம்மாவை காதலுடன் பார்க்கிறான் பாரதி. செடி நடும்போது இருவரின் விரல்களும் தொட்டுக்கொள்ள, அவர்களுக்குள்ளான காதல் மீண்டும் எட்டி பார்க்கிறது.

publive-image

அடுத்து, கண்ணம்மா வீட்டில் பாரதி என்ன செய்கிறான் என மறைந்திருந்து பார்க்கிறாள் சௌந்தர்யா. செடி நட்டு முடித்ததும் பாரதி கிளம்புகிறேன் என சொல்ல, ஹேமா, கண்ணம்மா செய்த உப்புமாவை கொண்டு வந்து கொடுத்து சாப்பிட சொல்கிறாள். இதைப்பார்க்கும் சௌந்தர்யா, பாரதிக்கு உப்புமா பிடிக்காதே என நினைக்க, பாரதி சாப்பிட ஆரம்பிக்கிறான். ஹேமா எப்படி இருக்கு என கேட்க, கண்ணம்மாவை பார்த்தவாறே சூப்பரா இருக்கு என சொல்கிறான் பாரதி. கண்ணம்மாவும் பாரதி சாப்பிடுவதை ஆசையாக பார்க்கிறாள். மறைந்திருந்து பார்க்கும் சௌந்தர்யாவோ நாங்க வீட்டில செஞ்சு கொடுத்த வேணாம்னு சொல்லுவ, இங்க நல்லா இருக்க, உனக்கு இன்னைக்கு வீட்டில இருக்கு என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள்.

publive-image

பின்னர் கை கழுவ போகும் போது மீண்டும் ஒருவரையொருவர் காதலுடன் பார்த்துக்கொள்கிறார்கள். அடுத்து ஹேமா மூலமாக பாரதியை தண்ணீர் குடிக்க சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர் பாரதி, சமையல் அம்மாக்கிட்ட சொல்லிரு என சொல்லிவிட்டு கிளம்புகிறான். அவன் போன பிறகு அங்கு வருகிறாள் சௌந்தர்யா. அவளைப் பார்த்ததும் ஹேமா ஆச்சரியப்படுகிறாள். இரண்டு பேரும் ஒண்ணா வந்தீங்களா என ஹேமா கேட்க, இல்ல நா இப்ப தான் வந்தேன் என சமாளிக்கிறாள். பின்னர் ஹேமா, பாரதி பூச்செடிகள் வாங்கி வந்ததைப் பற்றிகூற, இப்ப தான் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு என சொல்கிறாள். அடுத்து அங்கு லட்சுமி வர, அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே கூட்டி செல்கிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment