Advertisment

Vijay TV Serial: கடற்கரையில் சந்திப்பு; கனிவான பேச்சு; பழைய பாரதி... பழைய கண்ணம்மா!

Vijay TV barathikannamma serial today episode kannamma meets barathi: வெண்பாவை அசிங்கப்படுத்தும் சௌந்தர்யா, பாரதியிடம் தனியே பேசும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: கடற்கரையில் சந்திப்பு; கனிவான பேச்சு; பழைய பாரதி... பழைய கண்ணம்மா!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததுள்ளது என உறுதியாக நம்பும் கண்ணம்மா, இதைப் பற்றி பாரதியிடம் கேட்க முடிவெடுக்கிறாள். ஆனால் பாரதி அசிங்கப்படுவானே என யோசிக்கும் கண்ணம்மா, குழந்தைதான் முக்கியம் என பாரதிக்கு போன் செய்கிறாள். போனில் பாரதியிடம் நேரில் பார்க்கணும், வாங்க என அழைக்கிறாள். பாரதி வரமுடியாது என மறுக்க, முக்கியமான விஷயம் பேசணும் கண்டிப்பா வாங்க என கூப்பிட, வருவதாக ஒத்துக் கொள்கிறான்.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மா வீட்டுக்குள் வராததை நினைத்து வருத்தப்படுகிறார் வேணு. அப்போது அகில், கண்ணம்மா பக்கம் நியாயம் இருப்பதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் வெண்பா, அகில் பேசுவதைக்கேட்டு, இதுக்காகத் தான் அஞ்சலிக்கு தவறான மாத்திரைகள் கொடுத்திருக்கேன் என மனதுக்குள் நினைக்கிறாள். கண்ணம்மாவை நினைத்து சௌந்தர்யா கவலையாக பேச, சீக்கிரமே எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என சொல்கிறாள் அஞ்சலி. அப்படி நடக்க விடமாட்டேன் என வெண்பா மனதுக்குள் நினைக்க, வெண்பா நிற்பதை பார்த்து விடுகிறாள் சௌந்தர்யா. வெண்பா மறைந்துக் கொள்ள பார்க்க, சௌந்தர்யா அதட்டி கூப்பிடுகிறாள். வெண்பாவைப் பார்த்ததும் எல்லோரும் அதிர்ச்சியாக, சும்மா தான் வந்தேன் என சமாளிக்கிறாள்.

publive-image

பின்னர் சௌந்தர்யா ஒட்டு கேட்டுக்கிட்டு இருந்தியா என கேட்க, உங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சேன் என்கிறாள் வெண்பா. அப்போது சௌந்தர்யா, எதுக்காக வந்த என கேட்க, அங்கிளுக்கு உடம்பு சரியில்லனு கேள்விப் பட்டேன் அதான் வந்தேன் என்கிறாள். பின்னர் கண்ணம்மா எங்க என கேட்க, அவ உன்ன மாதிரி மானங்கெட்டவ இல்ல, போயிட்டா என்கிறாள் சௌந்தர்யா. மேலும் நாங்க பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கிறத பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம் என சொல்ல, டென்ஷனாகிறாள். பின்னர் சௌந்தர்யா அதை யாரும் தடுக்க நினைச்சா, என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும் என மிரட்டுகிறாள்.

publive-image

அடுத்ததாக, கடற்கரையில் பாரதியும் கண்ணம்மாவும் சந்திக்கிறார்கள். அப்போது பழசையெல்லாம் இருவரும் நினைத்து பார்க்கிறார்கள். பின்னர் கண்ணம்மா, டாக்டர் பாரதிக்கிட்ட இல்லாம, நான் என் பாரதி மாமா கூட பேச விரும்புறேன் என்கிறாள். அப்போது பாரதியை பற்றி புகழ்ந்து பேச, நக்கலாக சிரிக்கும் பாரதி, நானும் என் பழைய கண்ணம்மாகிட்ட தான் பேச விரும்புறேன் என்கிறாள். அப்போது பாரதி கண்ணம்மாவை முதன்முதலில் பார்த்ததை பற்றி காதலுடன் சொல்கிறான். உடனே கண்ணம்மா என்கிட்ட எந்த மாற்றமும் இல்லை, நான் பழைய கண்ணம்மா தான் என சொல்ல, வெறுப்பாக பார்க்கிறான் பாரதி.

publive-image

பின்னர் கண்ணம்மா, ஒரு உதவி வேணும் என கேட்க, அதை செய்ற நிலையில் நான் இல்லை என பாரதி மறுக்கிறான். ஆனாலும் கண்ணம்மா விடாப்பிடியாக, நம்ம குழந்தைய காணோம், யாரோ கடத்தி வச்சுக்கிட்டு மிரட்டுறாங்க என சொல்ல அதிர்ச்சியாகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment